districts

img

ரேசன் கடையை சேதப்படுத்திய யானைகள்

கோவை, மார்ச் 12- கோவை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி  அமைந்துள்ளது மதுக்கரை பகுதி. அங்கு ஏராளமான வன விலங்குகளின் நடமாட்டம் இருந்து வருகிறது. இந்நிலை யில், திங்களன்று அதிகாலை 2 மணி அளவில், அப்பகு திக்கு குட்டியுடன் வந்த 2 காட்டு யானைகள், அங்கிருந்த ரேசன்  கடையின் கதவை உடைத்து, அங்கு இருந்த அரிசி மூட்டை களை உண்ணத் துவங்கியது. இதையறிந்த அப்பகுதி மக்கள்  வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் யானைகளை விரட்ட முயற் சித்தனர். அப்போது, யானைக் கூட்டம் அரிசி மூட்டையை எடுத்து சாலையில் கொட்டி தின்ற கொண்டிருந்த சமயத்தில்,  பட்டாசுகளை வீசி யானைகளை விரட்டினர். உடனே அங்கு இருந்து யானைகள் திரும்பி வனப்பகுதியை நோக்கி  சென்றது.  உயர் நீதிமன்ற உத்தரவுப்படி யானைகளை வனப் பகுதி யில் விரட்ட பட்டாசுகள் மற்றும் வெடிபொருள்களை பயன்ப டுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அதனை பயன்ப டுத்தி வனவிலங்குகளை அச்சுறுத்தும் நபர்கள் மீது நடவ டிக்கை எடுக்க வனத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.  இந்த நிலையில் அங்கு வந்த வனத்துறை ஊழியர்களே யானை அருகே பட்டாசு வீசி யானையை விரட்டிய சம்பவம் வன ஆர்வலர் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.  இதேபோன்று, மேட்டுப்பாளையம் அடுத்துள்ள ஊமப்பா ளையத்தில் ஊராட்சி ஒன்றிய அரசு துவக்கப்பள்ளியின் நுழைவு வாயில் கதவை உடைத்து உள்ளே புகுந்த காட்டு  யானை, பின்னர் பின்புறமுள்ள சுவரையும் இடித்து அருகா மையிலுள்ள வாழை தோட்டத்தினுள் நுழைந்தது. அங்கு,  ஐம்பதிற்கும் மேற்பட்ட குலை தள்ளிய வாழை மரங்களை  சாய்த்து சேதப்படுத்தியது. இந்த ஒற்றை ஆண் காட்டு யானையை வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயி கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.