கோவை, செப்.21- தனியார் மய நடவடிக்கைகளை கண்டித்து, மாநிலம் தழுவிய தர்ணா போராட்டம் சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார் பில் நடைபெற்றது. சேவைத்துறையாக உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தை யும், இதில் பணியாற்றும் தொழிலா ளர்களின் வேலையைப் பறித்து, தனியார் மயப்படுத்தும் வகையில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத் தைக் கைவிட வேண்டும். 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். கேங்மேன் பணியாளர்களுக்கு விடுப்பு உள்ளிட்ட பணி விதி முறைகளை அமலாக்க வேண்டும். பணப்பயன்களை உரிய காலத்தில் வழங்க வேண்டும். ஊதிய உயர்வு நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும். ஒப்பந்த ஊழியர்களையும், பகுதி நேர பணியாளர்களையும் நிரந்த ரப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற சிஐடியு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் மாநிலம் தழுவிய தர்ணா போராட்டம் நடைபெற்றது. கோவை டாடாபாத் மின்வாரிய மத்திய அலுவலகம் முன்பு நடை பெற்ற தர்ணா போராட்டத்திற்கு, மின் ஊழியர் மத்திய அமைப்பின் கோவை மாநகர் தலைவர் வி.மது சூதனன் தலைமை ஏற்றார். இதில், சங்கத்தின் மாநிலச் செயலாளர் டி. மணிகண்டன், மாநிலத் தலைவர் டி.ஜெய்சங்கர், மாநில துணைத் தலைவர் ஆர்.நாகராஜ் உள்ளிட் டோர் கோரிக்கைகள் குறித்து உரை யாற்றினர். போராட்டத்தை வாழ்த்தி சிபிஎம் கோவை மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன், சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உரை யாற்றினர். முடிவில், மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில செயற் குழு உறுப்பினர் ஆர்.காளிமுத்து நன்றி கூறினார். தர்ணாவில் கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங் களிலிருந்து ஏராளமனோர் பங் கேற்று கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர். ஈரோடு ஈரோட்டில் காளை மாடு சிலை முன்பு மின் ஊழியர் மத்திய அமைப் பின் தர்ணா போராட்டம் நடை பெற்றது. இந்த தர்ணாவிற்கு சங்கத்தின் தலைவர் பி.கே.சிவக்குமார் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் வி.இளங்கோ, மண்டல செயலாளர்கள் சி.ஜோதி மணி (ஈரோடு), வி.ரகுபதி (சேலம்), கே.சுந்தரராஜன், ஆர்.ஜான்சன் (மேட்டூர்), கே.பாண்டியன், (கோபி), எம்டிபிஎஸ் எஸ்.செந்தில்வேலன், ஈரோடு உற்பத்தி திட்ட செயலாளர் எல்.செல்வ நாதன், மாநில செயற்குழு உறுப் பினர்கள் சி.சக்திவேல், பி.அன்பு ஆகியோர் பேசினர். சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.சுப்ர மணியன், செயலாளர் எச்.ஸ்ரீராம், உதவித்தலைவர் ஆர்.ரகுராமன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். இதில், பெருந்திரளான ஊழியர் கள் பங்கேற்றனர். முடிவில், கே. வெங்கடேசன் நன்றி கூறினார்.