தருமபுரி, மார்ச் 14- பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி மின்வாரிய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர் சங்கங்கள் சார்பில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. 110, 230, 400, 765 கே.வி துணை மின் நிலையங்களில் செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர் பதவிகளை ரத்து செய் யக்கூடாது. வாரிய ஆணை எண்:4யை ரத்து செய்ய வேண்டும். டான்ஜெட் கோ-வை மூன்றாக பிரிக்கும் தமிழக அரசின் அரசாணைகளை திரும்பப் பெற வேண்டும். பிரதமரின் சூரிய மின் தகடு பொருத்தும் திட்டத்தை செயல்ப டுத்த மின் ஊழியர்களை நிர்பந்திக்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு மின் ஊழியர் மத் திய அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தருமபுரி மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்பின் மாவட்ட துணைத்தலைவர் வி.வெண்ணிலா தலைமை வகித்தார். இதில் மாநில துணைத்தலைவர் பி. ஜீவா, மாவட்டச் செயலாளர் தீ.லெனின் மகேந்திரன், மாவட்ட துணைத்தலை வர் எம்.ஆறுமுகம், கோட்ட நிர்வாகிகள் கே.ஜெகன், ஏ.கோவிந்தன், எஸ்.ஆறு முகம், திட்டப் பொருளாளர் திம்மரா யன், திட்ட இணைச்செயலாளர் பொன் னுத்துரை, பொறியாளர் அமைப்பின் மாவட்டத் தலைவர் ஆர்.சுந்தரமூர்த்தி, ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் மாவட்டச் செயலாளர் ஜி.பி.விஜயன் உட்பட பலர் கலந்து கொண்டனர். சேலம் மின்வாரியத்தை பிரிக்கும் அரசா ணையை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பு சார்பில், சேலம் மாவட்டம், மேட்டூர் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதில் அமைப்பின் தலைவர் ஆரோக்கிய சாமி, நிர்வாகிகள் பி.சி.செப்பெரு மாள், டி.டி.பன்னீர்செல்வம், கே.கலை மணி உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.