தருமபுரி, நவ.3- காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் வாரிய தொழிற்சங்கங்க ளின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் வியாழனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தை மூன்றாக பிரிப்பதை கைவிட வேண்டும். இ - டெண்டர் முறையை ரத்து செய்ய வேண் டும். ஆரம்ப நிலை காலிப் பணியிடங்களை மின்வாரியமே நேரடியாக பணியாட்களை நியமனம் செய்து, விபத்துக் களை தவிர்க்க வேண்டும். மின் நுகர்வோ ருக்கு சீரான மின்சாரத்தை வழங்க நடவ டிக்கை எடுக்க வேண்டும். மின்சார வாரியத் தில் பணிபுரியும் அனைவருக்கும் ஊதிய உயர்வு, நிலுவைத்தொகை வழங்க வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழனன்று மின்வாரிய தொழிற்சங்கங்க ளின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. தருமபுரி மேற்பார்வை பொறியாளர் அலு வலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு சிஐடியு மின்ஊழியர் மத்திய அமைப் பின் மாநில துணைத்தலைவர் பி.ஜீவா தலைமை வகித்தார். இதில் மாவட்டச் செய லாளர் தீ.லெனின் மகேந்திரன், ஏயுஎஸ்யு மாவட்டச் செயலாளர் விநாயகமூர்த்தி, பொருளாளர் சந்திரகுமார், ஏடிஎஸ் மாவட்டச் செயலாளர் அன்பழகன், ஜனதா சங்க மாவட் டச் செயலாளர் கோபி, பொறியாளர் சங்க பொறுப்பாளர் அருணகிரி, என்எல்ஒ மாவட் டச் செயலாளர் தர்மலிங்கம், அம்பேத்கர் எம் ளாய்ஸ் யூனியன், மாவட்டச் செயலாளர் மாதேசன், எம்ப்ளாய்ஸ் பெடரேசன் மாவட்டச் செயலாளர் கோகுல்தாஸ், ஓய்வுபெற்றோர் அமைப்பின் மாவட்டச் செயலாளர் தியாகரா ஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஈரோடு ஈரோடு மின் பகிர்மான வட்ட அலுவல கம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு எம்ப்ளாய்ஸ் பெடரேசன் மண்டலச் செயலா ளர் நந்தகுமார் தலைமை வகித்தார். சிஐ டியு மண்டல செயலாளர் சி.ஜோதிமணி, பொறியாளர் சங்க சீனிவாசன், ஐக்கிய சங்க பிரபு, ஓய்வுபெற்றோர் அமைப்பின் மோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், ஸ்ரீதேவி நன்றி கூறினார். கோவை இதேபோன்று கோவை டாடாபாத் அலு வலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு எம்ப்ளாய்ஸ் பெடரேசன் மாநில இணைச் செயலாளர் ஏ.காதர் இப்ராஹிம் தலைமை வகித்தார். இதில் சங்கத்தின் கோவை வடக்கு செயலாளர் ஏ.முருகவேல், சிஐடியு மண்டல செயலாளர் டி.கோபாலகிருஷ்ணன், தலை வர் ஆர்.காளிமுத்து மற்றும் கூட்டு நடவ டிக்கைக்குழு நிர்வாகிகள் ஏ.ரங்கநாதன், எம்.நாகராஜ், அண்ணா தொழிற்சங்க மண்டல செயலாளர் பி.கே.தமிழ்வாணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், ஏ. அண்ணாதுரை நன்றி கூறினார்.