districts

img

தேர்தல் பணிக்குழு அமைப்பு கூட்டம்

நாமக்கல், ஏப்.2- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், தேர்தல்  பணிக்குழு அமைப்புக்கூட்டம் நடைபெற்றது. ஈரோடு மக்களவை தொகுதியில் நாமக்கல் மாவட்டத் தின் பள்ளிபாளையம், குமாரபாளையம் ஆகிய பகுதிகள் வரு கிறது. இந்நிலையில், ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளராக பிரகாஷ் உத யசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். தொடர்ந்து பல் வேறு கட்ட தேர்தல் பிரச்சாரங்களை வேட்பாளர் பிரகாஷ்  செய்துள்ள நிலையில், திமுக அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் பள்ளிபாளையம் காவேரி ஆர்எஸ்  மற்றும் ஆவரங்காடு கட்சி அலுவலகத்தில் தேர்தல் பணிக் குழு அமைப்பதற்கான சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இக்கூட் டத்தில், ஈரோடு தொகுதி வேட்பாளர் பிரகாஷை பெரு வாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைப் பதற்கு கடுமையாக தேர்தல் பணியாற்றுவது, கடந்த பத்து  ஆண்டுகளாக மக்களை வஞ்சித்து வரும் மோடி ஆட்சியின் அவலங்களை மக்கள் மத்தியில் எடுத்துரைத்து இந்தியா கூட் டணி வெற்றிக்கு அயராது பாடுபடுவது என முடிவு செய்யப் பட்டது. இதைத்தொடர்ந்து தேர்தல் பணிக்குழு புதிய பொறுப் பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.