திருப்பூர், பிப்.9- திருப்பூர் மாநகராட்சி 14 ஆவது வார்டில் மதசார்பற்ற முற் போக்கு கூட்டணியின் ஆதரவுடன் போட்டியிடும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கவிதா ரங்கராஜி டம் மார்க்சிஸ்ட் கட்சி திலகர் நகர் கிளை சார்பில் கே.குப்பு சாமி ரூ.10 ஆயிரம் தேர்தல் நிதியை புதனன்று வழங்கி னார். உடன் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே. ரங்கராஜ், வேலம்பாளையம் நகரச் செயலாளர் ச.நந்த கோபால், மூத்த தோழர் வி.பி.சுப்பிரமணியம் உள்ளிட் டோர் உடனிருந்தனர். அதேபோல், சிஐடியு பனியன் சங்க துணைத்தலைவர் எம்.பாண்டியராஜ் தேர்தல் நிதியாக ரூ.8 ஆயிரம் வேட்பாளர் கவிதா ரங்கராஜிடம் வழங்கி னார்.