districts

img

உருக்காலை தொழிலாளர்கள் தேர்தல் பிரச்சாரம்

சேலம், ஏப்.10- சேலம் தொகுதியில் இந்தியா கூட்டணி  சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளருக்கு  ஆதரவாக உருக்காலை தொழிலாளர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற தேர்தலில் சேலம் மக்க ளவை தொகுதியில் இந்தியா கூட்டணி சார் பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டி.எம். செல்வகணபதிக்கு உதயசூரியன் சின்னத் தில் வாக்குகேட்டு, சேலம் உருக்காலை தொழிலாளர்கள் மோகன் நகர் பகுதியில் வீடு  வீடாகசென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். சிஐ டியு மாவட்ட நிர்வாகி பி.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற பிரச்சாரத்தில் சிஐ டியு, எல்பிஎப், ஐஎன்டியுசி, எல்எல்எப் தலை வர்கள் பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று, சேலம் தாலுகா, கன்னங் குறிச்சி பேரூராட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேர்தல் பிரச்சாரம் நடைபெற் றது. இதில் சிபிஎம் தாலுகாச் செயலாளர் கே. எஸ்.பழனிசாமி, திமுக பேரூர் கழகச் செயலா ளர் குபேந்திரன், ஆர்.ரவி பாலு, இ.முருகே சன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.