districts

img

பொதுமக்களின் கவனத்தை ஈர்த்த  மார்க்சிஸ்ட் கட்சியின் தேர்தல் பிரச்சாரம்

நாமக்கல், ஏப்.1- நாமக்கல் தொகுதி கொமதேக  வேட்பாளர் மாதேஸ்வரனை ஆத ரித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியினர் நூதன முறையில் தேர்தல்  பிரச்சாரத்தில் ஈடுபட்டது பொதுமக் களின் கவனத்தை வெகுவாக ஈர்த் துள்ளது. நாமக்கல் மக்களவை தொகுதி யில் இந்தியா கூட்டணி சார்பில்,  கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி  வேட்பாளர் மாதேஸ்வரன் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடு கிறார். இந்நிலையில், நாமக்கல் மக்களவை தொகுதிக்குட்பட்ட பர மத்திவேலூர் சட்டமன்ற தொகுதி யில், மாதேஸ்வரனை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியி னர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட னர். எலச்சிபாளையம் ஒன்றியம்,  பொம்மம்பட்டி, முசிறி, புத்தூர்,  அக்கலாம்பட்டி, மருக்கலாம் பட்டி, மானித்தி, பெரியமணலி, சின் னமணலி, கோக்கலை, லத்துவாடி உள்ளிட்ட கிராமங்களில் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றது. இதில்  திமுக மேற்கு மாவட்டச் செயலா ளர் மதுரா செந்தில், கொமதேக மாவட்டச் செயலாளர் பெரியசாமி,  சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் எஸ்.தமிழ்மணி, சு.சுரேஷ், ஒன்றியச் செயலாளர்கள் வெங்க டாசலம், தேவராஜ், மாவட்டக்குழு  உறுப்பினர்கள் பழனியம்மாள், தங் கராஜ், சிபிஐ மாவட்டச் செயலாளர் க.அன்புமணி, காங்கிரஸ் பட்டிய லின பிரிவு மாநில துணைத்தலை வர் தங்கராஜ், விவசாய அணி  அமைப்பாளர் கந்தசாமி, திமுக  இளைஞரணி அமைப்பாளர் பாலாஜி, மாணவரணி அமைப் பாளர் பாலசுப்பிரமணியம், மதிமுக  ஒன்றிய செயலாளர் துரைசாமி உட் பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர், மோடி அரசு ஆட் சிப் பொறுப்பேற்றதில் இருந்து விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு, பெட்ரோல் விலை உயர்வு, உணவு பொருட்களின் விலை உயர்வு, பொதுத்துறை நிறு வனங்களை தனியார் மயம் ஆக் குதல் உள்ளிட்ட பல்வேறு மக்கள்  விரோத போக்குகளை அம்பலப்ப டுத்தும் வகையில், பதாகைகளை அணிந்தபடி பரப்புரையை மேற் கொண்டனர். இது பொதுமக்கள் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.