சேலம், ஏப்.16- கருமந்துறை மலைப்பகுதியில் கள்ளக்குறிச்சி தொகுதி வேட்பாளர் தே.மலையரசனுக்கு வாக்குசேகரித்து, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தி னர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட னர். வன உரிமை சட்டத்தை அமல்படுத் தாமல் மலைவாழ் மக்களை வஞ்சித்த மோடி அரசுக்கு வாக்களிக்க வேண் டாம். மணிப்பூர் மாநிலத்தில் சாதிய இனப்படுகொலைக்கு காரணமான பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது. சிறுபான்மை மக்களுக்கு எதிராக பல் வேறு சட்டங்களை இயற்றி தொடர்ந்து ஒற்றுமையை சீர்குலைத்து வரும் பாஜக அரசை தோற்கடிக்க வேண்டும் எனக்கூறி சேலம் மாவட்டம், கருமந் துறை மலைப்பகுதியில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர், கள்ளக் குறிச்சி தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பா ளர் தே.மலையரசனுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இதில் மலைவாழ் மக்கள் சங்க மாநி லப் பொருளாளர் பொன்னுசாமி, சிபிஎம் கல்வராயன் மலை செயலாளர் பாக்ய ராஜ், மலைவாழ் மக்கள் சங்க நிர்வா கிகள் என்.கிருஷ்ணமூர்த்தி, பி.ஆர்.மாதேஸ்வரன், வி.சின்னமணி, வாலி பர் சங்க செயலாளர் தர்மலிங்கம், தலை வர் வெங்கடேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.