districts

வாகனப் பேரணி மூலம் தேர்தல் விழிப்புணர்வு

சேலம், ஏப்.4- சேலத்தில் நடைபெற்ற தேர்தல் விழிப்புணர்வு இரு சக்கர வாகனப் பேரணியில், மாவட்ட தேர்தல் அலுவலர் ரா. பிருந்தாதேவி உட்பட பலர் கலந்து கொண்டனர். வரும் மக்களவை தேர்தலில் 100 சதவிகிதம் வாக்க ளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், வாக்களிப்ப தின் அவசியம் குறித்தும் சேலம் மகாத்மா காந்தி விளை யாட்டு மைதானத்திலிருந்து இருசக்கர வாகனப் பேரணி துவங்கியது. இந்நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட தேர்தல் அலு வலர் ரா.பிருந்தாதேவி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேரணியை துவக்கி வைத்து, இருசக்கர வாகனப் பேர ணியில் கலந்து கொண்டார். இப்பேரணியானது நான்கு ரோடு,  புதிய பேருந்து நிலையம், ஜங்ஷன், ஐந்து ரோடு, அஸ்தம் பட்டி, சுந்தர்லாட்ஜ் வழியாக மீண்டும் காந்தி விளையாட்டு  மைதானத்தில் நிறைவடைந்தது. இதில், முதல் தலைமுறை வாக்காளர்கள் கலந்துகொண்டு வாக்களிப்பது நமது கடமை  நமது உரிமை. நல்வாக்கு அளிப்போம்; அதை நல்லவர்க்கு  அளிப்போம். விரல் நுனியில் தேசத்தின் தீர்ப்பை எழுது வோம். சீர்திருத்தம் வேண்டுமெனில் ஆயிரம் முறை  சிந்தித்து வாக்களிப்பீர் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் தனியார் கல்லூரி பேராசிரியர், பேரா சிரியைகள், அரசு அதிகாரிகள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட முதல்முறை வாக்காளர்கள் கலந்து கொண்ட னர்.