“நீட் இருக்குமாம்” அண்ணாமலை ஆணவம்
கோயம்புத்தூர், ஏப்.17- “நீட் தேர்வால் பல பசங்க உசுரு போகுதே; என்ன செய்யப்போறீங்க” என அப்பாவித்தனமாக அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பிய பெண்ணிடம் உயிரே போனாலும் நீட் தேர்வை ரத்து செய்ய முடி யாது என அண்ணாமலை ஆணவமாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அண்ணா மலை சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். சுல்தான்பேட்டை அடுத்த புளியமரத்து பாளையம் பகுதியில் அண்ணாமலை வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தபோது பெண் ஒருவர், பாஜக ஆட்சிக்கு வந்தால் என்னனென்ன செய்வீர்கள் என அண்ணா மலையை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்தார். ஒவ்வொரு கேள்விக்கும் மாநில அரசின் மீது பழி சொல்லி தப்பித்த அண்ணாமலை, ஏராள மான மாணவர்களின் உயிர்களை பலி வாங் கிய நீட் தேர்வை ரத்து செய்வீர்களா என்ற பெண்மணியின் கேள்விக்கு, உயிரே போனாலும் நீட் தேர்வை ரத்து செய்ய மாட்டோம், நீட் தேர்வை விலக்கிவிட்டுதான் அரசியல் செய்ய வேண்டும் என்றால் அப் படிப்பட்ட அரசியல் தேவையில்லை என ஆணவமாக பதிலளித்தார். அண்ணாமலையின் இந்த பேச்சு அப் பகுதி மக்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி யது. சுல்தான் பேட்டை போன்ற பகுதிகளில் இப்போதுதான் முதல் தலைமுறையாக பட் டப்படிப்பு செல்லும் மாணவர்களாக இருக் கிறார்கள். தங்களது பிள்ளை மருத்துவராக வேண்டும் என்கிற கனவுகளோடு கல்விச் சாலைக்கு அனுப்பும் பெற்றோர்களே அதி கம். நீட் தேர்வு குறித்த அச்சத்தின் வாயிலா கவே அப்பெண்மணி இக்கேள்வியை எழுப் பியுள்ளார். ஆனால், ஆணவத்தின் உச்சத் தில் நின்று அண்ணாமலை பேசியது அதி ருப்யை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் அதிகம் பகிர்ந்து வரும் நெட்டிசன்கள், விழுகிற நாலு ஓட்டுக்கும் அவரே வேட்டுவச்சுக்குவார் என்று கருத் துக்களை பகிர்ந்து வருகின்றனர். பாஜக வுடன் கூட்டணி அமைத்திருக்கிற பாட்டாளி மக்கள் கட்சி நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிற நிலையில், அண்ணாமலையின் இந்த பேச்சு பாமக தொண்டர்களை எரிச் சலடையச்செய்துள்ளது. தேர்தல் இறுதிக் கட்ட பரப்புரையில் தன் தலையில் தானே மண் அள்ளி அண்ணாமலை கொட்டி விட்ட தாக அரசியல் நோக்கர்கள் விமர்சித்து வருகின்றனர்.
இந்தியா கூட்டணியே ஆட்சி அமைக்கும்
ஈரோடு, ஏப். 17- இந்தியா கூட்டணியே ஆட்சி அமைக்கும், நமது உரிமைகளை நாம் பெறுவோம் என ஈரோட்டில் இறுதிக் கட்ட பரப்புரையில் அமைச்சர் முத்து சாமி தெரிவித்தார். ஈரோட்டில் இந்தியா கூட்டணியில் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கே.இ.பிராகாஷை ஆதரித்து அமைச் சர் முத்துசாமி பிரச்சாரம் மேற்கொண் டார். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் முத்துசாமி, தேர்தல் பணியில் ஒவ்வொரு நாளும் ஊக்கத் தையும், நம்பிக்கையும் அளிக்கிறது. அதற்குக் காரணம் திமுக அரசு பொறுப் பேற்றதிலிருந்து இன்று வரை முதல்வர் செய்திருக்கிற பணிகள் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றிருக்கின் றன. குறிப்பாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம். ஒரு கோடியே 16 லட்சம் பேர் உரிமைத் தொகை பெற்று வருகிறார்கள். விடுபட்ட மனுக்களை ஆய்வு செய்து உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அதுபோல பெண்களுக்கு கட்டண மில்லாத பேருந்து பயணம், காலை உணவு திட்டம், புதுமைப்பெண் திட்டம் போன்றவை பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பெருந்துறை சிப்காட்டில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் சுத்திகரிப்பு நிலை யம் அமைக்கப்படுகிறது. பாதிக்கப் பட்ட பகுதிகளில் நிலத்தடி நீரை வெளி யில் எடுத்து சுத்தப்படுததி மீண்டும் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படு கிறது. மொடக்குறிச்சி பகுதியில் மஞ்சள் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும். சென்னிமலை ஊராட்சி ஒன்றியப் பகுதியில் கூட்டு குடிநீர் திட்டம் அமைக்கப்படுகிறது. வ.ஊ.சி பூங்காவில் ரூ.15 கோடி செல வில் மேம்படுத்தப்படும். ஈரோடு மாநக ராட்சி பகுதியில் ரூ.30 கோடி மதிப்பீட் டில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும். ரூ.6 கோடி மதிப்பில் நூலகம் அமைக்கப்படும். சிக்கய்ய நாய்க்கர் கல்லூரி அரசு கல்லூரியான பிறகு மிகப் பெரிய ஸ்டேடியம் அமைக் கப்படும். ஐஏஎஸ் அகாடமி வரும். இந்த ஒன்றிய அரசு நம்மை ஒதுக்கி வைத்திருக்கிறது. புறக்கணிக்கப்படு கிறோம். இந்தியா கூட்டணி வலிமையா கவும், ஒற்றுமையாகவும் இருக்கிறது. இந்தியா கூட்டணி ஆட்சி அமையும். அப்போது, தமிழ்நாட்டின் உரிமைக ளைப் பெற முடியும். நம்முடைய மாவட் டத்திற்கு, தொகுதிக்கு பல திட்டங் களை செய்வதற்கு வாய்ப்பாக அமை யும் என்றார்.
அதிமுக வேட்பாளருக்கு எதிராக தாய் மாமன் வெளியிட்ட துண்டறிக்கை
ஈரோடு, ஏப். 17- ஈரோடு மாவட்டம், கொடுமுடி வட்டம், புஞ்சை கொளாநல்லி, குட்டப்பாளையத் தைச் சேர்ந்தவர் கே.எஸ்.செல்வராஜ். இவர் ஈரோட்டில் அதிமுக சார்பில் போட்டியிடும் ஆற்றல் அசோக்குமாரின் தாய்மாமன் என சொல்லப்படுகிறது. இவர் தற்போது வெளி யிட்டுள்ள துண்டறிக்கை பரபரப்பை ஏற்படுத் தியுள்ளது. அதில் செல்வராஜ் குறிப்பிட்டுள்ளதா வது, செல்வராஜின் மகள்கள் தனக்கும், தனது தாயாருக்கும் ஜீவனாம்சமாக கொடுத்த ரூ.1 கோடியை பெற்றுக் கொண்ட அசோக்குமார் திருப்பித் தரவில்லை. அதுகு றித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது. அசோக்குமாரின் சொந்த தம்பி மருத்து வர் ஆனந்தகுமார். அவரது மனைவி சாந்தி. இவருக்கு கோவையில் பல்மருத்துவமனைக்கு சொந்தமான அன்னூரில் உள்ள நிலத்தை வங்கியில் கடன் பெற அசோக்குமார் அட மானம் வைத்தார். அதையும் மீட்டுக் கொடுக் கவில்லை. எனவே ஆற்றலார் மீது ஆறு பிரி வுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள் ளது. மேலும் தம்பி குடும்பத்திற்குச் சொந்த மான இடத்தில் அவருக்குத் தெரியாமல் இவர் ஆக்கிரமித்து கட்டிடம் கட்டினார். இந்த மோசடி குறித்தும் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தம்பி குடும்பத்திற்கு கொலை மிரட்டல் விடுத்தற்காக கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போலி கையெ ழுத்து போட்டு ஆவணம் தயாரித்ததற்காக மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள் ளது. நான் தூக்கி வளர்த்த பையன், தாய் மாம னான எனக்கும், சொந்த தம்பிக்கும் நம்பிக்கை துரோகம் செய்துள்ளான். இன்னும் நிறைய பேரை ஏமாற்றியுள்ளார். மேலும் சமூக சேவகர் என்ற நாடகம் போட்டு மக்களை ஏமாற்றி எம்பி ஆக வேண்டும் என்று தேர்தலில் நிற்கிறான். வாக்காள பெருமக்களே, அதிமுகவி னரே, மோசடிக்காரனுக்கு ஓட்டு போடாதீங்க. பணத்திற்காக எதையும் செய்வான். இந்த நாட்டையும் காட்டிக் கொடுக்க தயங்க மாட் டான். எனவே அவருக்கு யாரும் வாக்களிக்க வேண்டாம் என்று கண்ணீர் விட்டு மன்றாடி கேட்டுக் கொள்கிறேன் என்று கையொப்ப மிட்டு துண்டறிக்கை வெளியிட்டுள்ளார். இது தற்போது ஈரோடு மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் பணியாளர்களுக்கென சிறப்பு பேருந்துகள் இயக்க கோரிக்கை
தருமபுரி, ஏப்.17- தருமபுரி மக்களவை தொகுதிக்குட்பட்ட பாப்பிரெட்டிப்பட்டி, பாலக்கோடு, தருமபுரி, பென்னாகரம், மேட்டூர், அரூர் ஆகிய 6 சட்ட மன்ற தொகுதிகளிலும் தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்க ளுக்கு சம்பந்தப்பட்ட சட்டமன்ற தொகுதி யின் தலைமை இடங்களில், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மூலம் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், காவல் துறையினர் உள்ளிட்டோ ருக்கு ஏப்.18 ஆம் தேதி தேர்தல் பணியாற்றக் கூடிய வாக்குப்பதிவு மையங்கள் குறித்த விவரங்கள் தெரிவித்து, அனுமதி கடிதங்கள் வழங்கப்படவுள்ளன. தருமபுரி மக்களவைத் தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபடுவோர் தங்களின் சொந்த தொகுதியிலிருந்து வேறொரு தொகுதிகளுக்கு பணிக்கு செல்ல உள்ளனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்குச்சாவடிகளுக்கு கொண்டுசெல்ல ஒவ்வொரு வழித்தடத்தி லும் லாரிகள், சரக்கு வாகனங்கள் இயக்கப் படுகின்றன. இதேபோல, ஒவ்வொரு தொகு தியிலும் வாக்குப்பதிவு மையங்களுக்கு தேர்தல் பணிகளுக்கு செல்லக்கூடிய ஆசிரி யர்கள், அரசு ஊழியர்கள் சென்று வரும் வகையில் அரசு சிறப்புப் பேருந்துகளை இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.
பால் பாக்கெட் மூலம் தேர்தல் விழிப்புணர்வு
நாமக்கல், ஏப்.17- நாமக்கல் மாவட்டத்தில் ஆவின் பால் பாக் கெட் மூலம் தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத் தப்பட்டு வருவதாக மாவட்ட தேர்தல் அலுவ லர் ச.உமா தெரிவித்துள்ளார். வரும் மக்களவை தேர்தலில் 100 சதவிகி தம் வாக்குப்பதிவை உறுதி செய்திடும் வகை யில், பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். அத னடிப்படையில், நாள்தோறும் 3 லட்சம் நபர் களுக்கு சென்றடையும் வகையில், ஆவின் நிறுவனத்தின் சார்பில் பால் பாக்கெட்டுகளில் தேர்தல் நாள் அச்சிடப்பட்டு சுமார் 1.50 லட் சம் குடும்பங்களை சென்றடையும் வகையில் விற்பனையை நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் ச.உமா தொடங்கி வைத்தார். 487 கிராமங்களில் ஆவின் நிறுவனத்தின் சார்பில் பால் உற்பத்தியாளர்களை சென்றடையும் வகையில், அனைத்து பால் உற்பத்தியாளர் சங்கங்கள், ஆவின் விற்பனையகம், ஆவின் பாலகம் போன்ற இடங்களில் துண்டு பிரசு ரங்களாகவும், ஒட்டு வில்லைகளாகவும் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 1.50 லட்சம் குடும்பங்கள் நகர்ப் புறங்களிலும், சுமார் 13,500 கிராமப்புற குடும் பங்களையும் சென்றடையும் வகையில் நாமக்கல் ஆவின் நிறுவனத்தின் சார்பில் விழிப்புணர்வு பணிகள் தொடங்கி வைக்கப் பட்டுள்ளது. இந்த நிகழ்வு புதனன்று முதல் வெள்ளி யன்று (நாளை – தேர்தல் வாக்குப்பதிவு நாள்) வரை நடைபெறும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த விழிப்பு ணர்வு பணிகளில் ஆவின் நிறுவனத்தின் சார்பில் சுமார் 500க்கும் மேற்பட்ட அலுவலர் கள் மற்றும் பணியாளர்கள் பணியமர்த்தப்பட் டுள்ளனர். முன்னதாக, இந்நிகழ்ச்சியில் மக ளிர் திட்ட இயக்குநர் கு.செல்வராசு, ஆவின் பொது மேலாளர் ஆர்.சண்முகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.