மின் தடை
அவிநாசி, ஜன.1 நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா, 15.வேலம்பாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், திங்களன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அவி நாசி மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனர். நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா: பச்சாம்பாளையம், பரமசிவம்பாளையம், பள்ளி பாளையம், பெரியாயிபாளையம், காளம்பாளையம், பொங்குபாளையம், பழைய ஊஞ்சப்பாளையம், புது ஊஞ்சபாளையம், குப்பாண்டம்பாளையம், துலுக்க முத்தூர், நல்லாத்துப்பாளையம், வ.அய்யம்பாளையம், ஆயிக்கவுண்டம்பாளையம், வேலூர், மகாராஜா கல்லூரி, எஸ்.எஸ்.நகர், வீதிக்காடு, முட்டியங்கிணறு, திருமலை நகர், பெ.அய்யம்பாளையம் ஒரு பகுதி, கணக்கம் பாளையம் சிட்கோ. 15.வேலம்பாளையம்: ஆத்துப்பாளையம், அனுப்பர்பாளையம், திலகர்நகர், அங்கேரிபாளையம், பெரியார்காலனி, அம்மாபாளையம், அனுப்பர்பாளையம்புதூர், வெங்கமேடு, மகாவிஷ்ணுநகர், தண்ணீர்பந்தல்காலனி, ஏ.வி.பி.லே அவுட், போயம் பாளையம், சக்திநகர், பாண்டியன்நகர், நேருநகர், குருவா யூரப்பன் நகர், நஞ்சப்பா நகர், லட்சுமி நகர், இந்திரா நகர், பிச்சம்பாளையம்புதூர், குமரன் காலனி, செட்டிபாளையம், கருப்பராயன் கோயில் பகுதி, சொர்ணபுரி லே-அவுட், ஜீவா நகர், அன்னபூர்ணா லே-அவுட், திருமுருகன்பூண்டி விவே கானந்த கேந்தரா பகுதி, டிடிபி மில்.
கஞ்சா: 3 பேர் கைது
திருப்பூர், ஜன.1- அவிநாசி மற்றும் பெரு மநல்லூர் பகுதிகளில் ஏராள மான வட மாநில தொழிலா ளர்கள் தங்கி இருந்து பணி யாற்றி வருகின்றனர். இவர் களுக்கு சிலர் கஞ்சா சப்ளை செய்வதாக திருப்பூர் மது விலக்கு பிரிவு போலீ சாருக்கு தகவலின் அடிப் படையில் அவிநாசி மது விலக்கு போலீசார் அவிநாசி மற்றும் பெருமாநல்லூர் பகுதிகளில் வட மாநில தொழிலாளர் தங்கி இருக் கும் பகுதிகளில் திடீரென சோதனை மேற்கொண்ட னர். அப்போது வட மாநில தொழிலாளர்களுக்கு கஞ்சா சப்ளை செய்து கொண்டி ருந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த தீபக் பரிக், மனோஜ் பிரதான், ரெட்டிகன்டா மஜூஹி ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 3.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
தொழிலாளி தற்கொலை
திருப்பூர், ஜன.1- பல்லடம் அருகில் தொழி லாளி தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற் படுத்தி உள்ளது. பல்லடம்- மாணிக்கா புரம் சாலை பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் என்பவரது மகன் மனோகரன். அச்சக தொழிலாளி. இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் மனோகரன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அறிந்த பல்லடம் போலீசார் சம்பவ இடம் சென்ற மனோகரன் உடலை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கடன் பெற்றவருக்கு மிரட்டல்
ஈரோடு, ஜன.1- கொடுமுடி அருகே வீட்டு அடமான கடன் பெற்றவ ருக்கு மிரட்டல் விடுத்த ஆடியோ வைரலாகி வருகிறது. ஈரோடு மாவட்டம், கொடுமுடி வட்டம், கொளாநல்லி கருங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சிவராஜ். இவர் பைவ் ஸ்டார் மைக்ரோ பைனான்ஸ் மூலம் வீட்டு அடமான கடனாக ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் பெற்றுள்ளார். மாதந்தோறும் 5 ஆம் தேதிக்குள் தவணை செலுத்த வேண்டும். இந்நிலையில், தனது குடும்பத்தில் உள்ளவர்களுக்கு உடல்நிலை சரி யில்லாத காரணத்தால் கடனை குறிப்பிட்ட தேதிக்குள் செலுத்த இயலவில்லை. இதனால், பைவ் ஸ்டார் நிதி நிறு வனத்தினர் சிவராஜின் தொலைபேசிக்கு இரவு 10 மணிக்கு மேல் போன் செய்து தகாத வார்த்தைகளால் பேசி, மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த உரையாடல் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விஷமருந்தி வயதான தம்பதி தற்கொலை
ஈரோடு, ஜன. 1- வெள்ளோடு அருகே விஷமருந்தி வயதான தம்பதி தற்கொலை செய்து கொண்டனர். ஈரோடு மாவட்டம், வெள்ளோடு அருகே சின்னதொட்டி பாளையம், கள்ளியங்காட்டுத் தோட்டத்தில் கருப்பண்ண கவுண்டர்(85), பழனியம்மாள் (66) தம்பதி குடியிருந்து வந்தனர். இவர்கள் தங்களது சொந்த தோட்டத்தில் விவசா யம் செய்து வந்தனர். பழனியம்மாள் சிறுநீரக பாதிப்பால் அவதிப்பட்டு வந்துள்ளார். அதேபோல இவரது கணவருக்கு செவித்திறன் மற்றும் கண் பார்வை குறைபாடு இருந்துள் ளது. இந்நிலையில் சனிக்கிழமை தென்னை மர வண்டுகளுக்கு வைக்கும் சல்பாஸ் மாத்திரையை சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டனர். இதுகுறித்து அவர்களது மகன் ராஜா கந்தசாமி கொடுத்த புகாரின் பேரில் வெள்ளோடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
உதகை: உறைபனியின் தாக்கம் அதிகரிப்பு
உதகை, ஜன.1- உதகையில் சனியன்று 3 டிகிரி செல்சியசாக வெப்பநிலை பதிவானது. மேலும், உறைபனியின் தாக்கம் அதிகரித்திருப்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், உதகையில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் தொடங்கி பிப்ரவரி மாதம் வரை பனிக்காலம் நிலவுகிறது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக காலநிலை மாறுபாடு காரணமாக இந்த ஆண்டு நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை வடகிழக்கு பருவமழை தாமதமாக தொடங்கியது. அதைத் தொடர்ந்து பனிக்காலமும் 20 நாட்கள் தாமதமாக கடந்த நவ.15 ஆம் தேதி யன்று முதல் தொடங்கியது. இதைய டுத்து உதகையில் மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்ததால், பனிப்பொழிவு குறைந்து ஒரு மாதத்திற்கு பின்னர் மீண்டும் கடந்த வாரம் பனிப்பொழிவு தொடங்கியது. இந்நிலையில், கடந்த 2 நாட்களாக உதகையில் பனிப்பொழிவின் தாக்கம் மிக அதிகமாக இருக்கிறது. அதாவது காலை முதல் மாலை வரை நன்றாக வெயிலும், மாலை முதல் மறுநாள் விடியற்காலை வரை கடும் பனிப்பொழிவும் நிலவி வருகிறது. உதகையில் சனியன்று குறைந்தபட்சமாக 3 டிகிரி செல்சியஸ், அதிகபட்சமாக 17 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. இதன்படி உதகையில் தாவரவியல் பூங்கா தலைக்குந்தா, படகு இல்லம், பைக்காரா, மார்க்கெட், குதிரை பந்தயம் மைதானம் ஆகிய பகுதிகளில் அதிகாலை முதலே அதிகளவில் பனி படர்ந்து காணப்பட்டது. இதனால் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது பனி படர்ந்து கிடக்கிறது. இதனால் பச்சை புல்வெளி மீது வெள்ளை கம்பளம் போர்த்தியது போல் தோற்றம் அளிக்கிறது. இதனால் வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் குளிர் காரணமாக கடும் அவதிப்படுகின்றனர். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே உதகையில் நிலவும் கடும் குளிரிலிருந்து தப்பிக்க பொதுமக்கள் ஆங்காங்கே தீ மூட்டி குளிர் காய்கின்றனர். ஒரு சிலர் பனிப்பொழிவை செல்போன் மற்றும் வீடியோ கேமராக்களில் வீடியோ பதிவு மற்றும் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
10,74,453 குடும்பங்களுக்கு பொங்கல் தொகுப்பு: சேலம் ஆட்சியர்
சேலம், ஜன.1- 2023 பொங்கல் விழாவை கொண்டாடும் விதமாக சேலம் மாவட் டத்தில் உள்ள 10 லட்சத்து 74 ஆயி ரத்து 453 குடும்பங்களுக்கு சிறப்பு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட உள்ளது என மாவட்ட ஆட்சியர் செ. கார்மேகம் தெரிவித்துள்ளார். தமிழர் திருநாளாம் தைப்பொங் கலை கொண்டாடும் வகையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற் றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்க ளுக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூ.ஆயிரம் ரொக்கத்துடன் முழுக்கரும்பும் சேர்த்து வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி சேலம் மாவட்டத்தில் 10 லட்சத்து 73 ஆயிரத்து 514 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் 939 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் ஆக மொத்தம் 10 லட்சத்து 74 ஆயி ரத்து 453 குடும்பங்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்படவுள்ளது. பொங் கல் பரிசு வழங்குவதற்காக சேலம் மாவட்டத்திற்கு ரூ.118.98 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு நகர்புறப்பகுதி களில் நாள் ஒன்றுக்கு 350 குடும்ப அட்டைதாரர்களுக்கும், கிராமப்புற பகுதிகளில் நாள் ஒன்றுக்கு 250 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங் கும் வகையில் ஜன.3 ஆம் தேதி (நாளை) முதல் ஜன.8 ஆம் தேதி வரை குடும்ப அட்டைதாரர்களின் வீட்டிற்கே சென்று நியாய விலைக் கடை விற்பனையாளர்கள் மூலம் டோக்கன் வழங்கப்படும். அனைத்து நியாய விலைக்கடைகளிலும் ஜன.9 ஆம் தேதி முதல் பொங்கல் தொகுப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங் கப்படும். பொங்கல் பரிசு டோக்கனில் தெரிவிக்கப்பட்டுள்ள விபரங்களின் படி, குடும்ப அட்டைதாரர்கள் நியாய விலைக்கடைக்குச் சென்று பொங் கல் பரிசு பெற்றுக்கொள்ளலாம். அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக் கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என தெரிவித் துள்ளார்.
கோவை வாலிபர் ஈரோட்டில் மரணம்
ஈரோடு, ஜன.1- ஈரோட்டில் நண்பர்களுடன் தங்கியிருந்த கோவை வாலி பர் மரணமடைந்தார். தேனி மாவட்டம், போடி அருகே வெள்ளையந்தி தெரு வைச் சேர்ந்த முருகன் (22) என்பவரும், அவரது நண்பர் முருககுமாரும் பவானி, லட்சுமிநகர் பகுதியில் உள்ள காயத் திரி இல்லத்தில் தங்கி நான்கு வருடங்களாக ஊறுகாய் வியா பாரம் செய்து வந்தனர். இவர்களுக்கு பழக்கமான திருப்பூ ரைச் சேர்ந்த பிரவின் என்பவர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அப்துல் அஹது (42) என்பவரை இரண்டு நாட்கள் அவர்களுடன் தங்க வைத்துள்ளார். அதன்படி கடந்த டிச.25 ஆம் தேதி அப்துல் அஹது வந்து தங்கியுள்ளார். இந்நிலையில் 30ஆம் தேதி மது அருந்தியிருந்த அஹது அதிகாலை 1 மணியளவில் நெஞ்சு வலிப்பதாகக் கூறியுள் ளார். 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனை யில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அதிகாலை 3 மணி யளவில் இறந்துள்ளார். இறந்து போன அப்துல் அஹது கோவை மாவட்டம், சிக்கதாசம்பாளையம், கரட்டுமேடு என்று கூறப்படுகிறது. இதுகுறித்து சித்தோடு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அணை நிலவரம்
பவானிசாகர் அணை
நீர்மட்டம்: 103.83 அடி.
நீர்வரத்து: 1529 க.அடி.
தண்ணீர் திறப்பு: 2.700 கனஅடி.
குண்டேரிபள்ளம் அணை
நீர்மட்டம்: 41.75 அடி
பெரும்பள்ளம் அணை
நீர்மட்டம்: 30.84 அடி
வரட்டுப்பள்ளம் அணை
நீர்மட்டம்: 33.46 அடி
மேட்டூர் அணை
நீர்மட்டம்: 118.79 அடி
நீர்வரத்து: 4081 க.அடி
திறப்பு: 12400 க.அடி