கோபி, பிப்.8- நம்பியூர் அருகே கோடையில் ஏற்ப டும் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க எலத்தூர் பெரியகுளத்தை அத்திகடவு - அவிநாசி திட்டத்தில் இணைக்க விவ சாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். ஈரோடு மாவட்டம், நம்பியூர் அருகே 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது எலத்தூர் பெரியகுளம். கடந்த 2019 ஆம் ஆண்டு இக்குளம் ரூ.1 கோடி மதிப்பீட்டில் தூர்வாரப்பட்டது. அவ் வாறு, தூர்வாரப்பட்ட எலத்தூர் குளம் நிரம்பும் என விவசாயிகள் எதிர்பார்த் திருந்த நிலையில், நம்பியூர் பகுதியில் போதிய மழை இல்லாததால் குளம் சிறிய குட்டைபோல் காட்சியளித்தது. இந்நிலையில், கோடையில் ஏற்ப டும் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க எலத்தூர் பெரியகுளத்தை அத்திகடவு - அவிநாசி திட்டத்தில் இணைக்க வேண்டி அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இதனால் நான்கு ஆண்டுகளாக நிரம்பாத எலத் தூர் பெரியகுளம் அத்திகடவு - அவி நாசி திட்டம் தொடங்கினால் நிரம்பும் என விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ள னர்.