கேள்விக்குறியாக நிற்கும் மலைவாழ் குழந்தைகளின் கல்வி வாய்ப்பு
திருப்பூர், அக்.11- கடந்த 20 ஆண்டு காலமாக உடுமலை பகுதியில் உள்ள மலைவாழ் கிராமங்களின் குழந்தைகளின் கல்வி வாய்ப்பு கேள்விக்குறி யாக உள்ளது. இப்பிரச்சனையில் குழந்தைக ளுக்கு கல்வி கற்பிப்பதற்கு ஆசிரியர்கள் அங்கு தங்கி வேலை செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் துணைச் செயலாளர் கோ.செல்வன் வலியு றுத்தி உள்ளார். இதுதொடர்பாக தளி பேரூராட்சி மன்றத் துணைத்தலைவரும், மலைவாழ் மக்கள் சங் கத்தின் மாநிலத் துணைச்செயலாளருமான கோ.செல்வன் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜுக்கு புதனன்று அனுப்பி யுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: உடு மலைப்பேட்டை மலை பகுதியில் மாவடாப்பு, குழிபட்டி, குருமலை, திருமூர்த்திமலை, கோடந்தூர், தளிஞ்சி ஆகிய 6 வன குடியி ருப்புகளில் மலைவாழ் மக்கள் குழந்தைகள் படிப்பதற்கு 2004இல் ஊராட்சி ஒன்றிய துவக் கப் பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டன. இப்பள்ளி களுக்கு ஒரு தலைமை ஆசிரியரும், ஒரு உதவி ஆசிரியர் என ஒரு பள்ளிக்கு இரண்டு ஆசிரியர்கள் வீதம் உள்ளனர். ஆனால் 2004இல் இருந்து இருக்கும் இப்பள்ளிக ளுக்கு திருமூர்த்திமலை பள்ளியை தவிர மற்ற பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் வாரத்தில் ஒரு நாள் மட்டுமே வருகின்றனர். இப்பள்ளி களில் இருக்கும் குழந்தைகள் அடிப்படை எழுத்தறிவு என்ற முறையில் அ, ஆ,.. கூட எழுதப் படிக்கத் தெரியாதவர்களாக உள்ள னர். இப் பள்ளியில் 2004 இல் இருந்து இந்த கல்வியாண்டு மாணவர்களுக்கு பாடம் நடத் தாமல் தேர்வு வைக்காமல் 5 ஆம் வகுப்பு முடித்த மாற்று சான்று வழங்குகிறார்கள். இப்படி 5ஆம் வகுப்பு முடித்த மாணவர் களை வேறு பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு சேர்க் கும் போது எழுத படிக்க தெரியாததால் அந்த பள்ளியில் இருக்கும் சக மாணவர்களை போல எழுத படிக்க முடிவதில்லை. இதனால் இம் மாணவர்கள் பள்ளிக்கு போகாமல் இடை யில் நின்று விடுகின்றனர். 2004 ஆம் ஆண்டு முதல் இதுவரை மாவடாப்பு, குழிபட்டி, குரு மலை பள்ளியிலிருந்து ஒரு மாணவன் கூட உயர்நிலைப் பள்ளிக்கு சென்றதில்லை. இது தொடர்பாக ஆசிரியர்களிடம் ஏன் பள்ளிக்கு வருவதில்லை என்று கேட்டால் தங்குவதற் கும், போக்குவரத்துக்கும் முறையான வசதி கள் செய்து கொடுங்கள். மலைவாழ் மக்கள் இங்கு தங்குவது போல் எங்களால் முடியாது. எங்களுக்கு சமவெளிப் பகுதியில் இருப் பதை போல் வசதிகள் செய்து தாருங்கள் என்று தெரிவிக்கின்றனர். இதுதொடர்பாக உடுமலைபேட்டை உதவி கல்வி அலுவலரிடம் பல முறை தெரி வித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. மாறாக ஆசிரியர்களுக்கு சார்பாகவே பேசு கின்றனர். இதனால் கடந்த 20 ஆண்டுகளாக மலைவாழ் மக்கள் குழந்தைகளின் கல்வி கேள்வி குறியாகவே உள்ளது. இப்பிரச்சனை யில் உடனடியாக ஆசிரியர்கள் இங்கு தங்கி கற்பிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று கோ.செல்வன் வலியுறுத்தியுள் ளார்.
வாலிபர் சங்க ரத்த தான கழகத்திற்கு சான்றிதழ்
திருப்பூர், அக். 11 - அக்டோபர் 1ஆம் தேதி தன்னார்வ ரத்த தான தினத்தை முன்னிட்டு புதனன்று திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட ரத்ததான கழகத்திற்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் முருகேசன் பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசை வழங்கினார். இதில் வாலிபர் சங்கத்தின் மாவட்ட ரத்த தான கழக கன்வீனர் விவேக் மற்றும் வடக்கு மாநகர கமிட்டி ரத்த தான கழக கன்வீனர் பிரவீன் ஆகியோர் கலந்து கொண்டு சான்றிதழ், நினைவுப் பரிசைப் பெற்றனர்.
கடைக்குள் புகுந்த கழிவுநீர்
திருப்பூர், அக்.11- திருப்பூரில் இரண்டு நாட்கள் பெய்த பலத்த மழையால் கழிவுநீர் கடைகளுக்குள் புகுந்து வியாபாரம் பாதிக்கப்பட் டது. திருப்பூர் மாவட்டம் முழுவதும் கடந்து இரு நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகளில் மழை நீர், கழிவுநீருடன் கலந்து சாலையில் ஓடுவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர். மேலும் பி.என். சாலையில் உள்ள பல கடைகளுக்குள் கால்வாய் நீர் சென்றதால் கடைகள் மூடப்பட்டன. இந்நிலையில், திருப்பூர் மாநகரம் 1ஆவது வார்டுக்குட்பட்ட பிரியங்கா நகரில் செவ் வாயன்று பெய்த மழையில் ஆலமரம் சாய்ந்து வாய்க்கா லில் விழுந்துள்ளது. இதனால் மழைநீர் செல்ல வழி இல்லா மல் தேங்கி நிற்கிறது. மரத்தை அகற்றி தரும்படி மாநக ராட்சி நிர்வாகத்தில் தெரிவித்தும், மரம் அகற்றப்படாமல் உள்ளது. இதனால், மழை நீர் குடியிருப்பு பகுதிக்கு செல்லும் அபாயம் உள்ளது. எனவே ஆலமரத்தை உடனடியாக அகற்றி தரும்படி அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கடன் வழங்குவதாக கூறி மோசடி
அவிநாசி, அக்.11- அவிநாசி அருகே செம்பியநல்லூரில் கடன் கொடுப்ப தாகக் கூறி முன்பணம் செலுத்தவைத்து மக்களிடம் லட்சக்க ணக்கில் மோசடி நடைபெற்ற சம்பவம் அதிர்ச்சையை ஏற் படுத்தியுள்ளது. அவிநாசி அருகே செம்பியநல்லூர் ஊராட்சி மேட்டுப் பாளையம் சாலையில் என்கேபி தனியார் நிதி நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இதில் ஒரு நபருக்கு 1 லட்சம் ரூபாய் கடன் வழங்குவதாகவும், இதற்கு ஒரு நபருக்கு முன்பண மாக ரூ.5 ஆயிரமும், ஆவணத் தொகை ரூ.1000 மும் செலுத்த வேண்டும் எனக் கூறியுள்ளனர். மேலும் ஒரு நப ருக்கு ரூ.7 லட்சம் வரை கடன் வழங்குவதாகவும் தெரிவித்துள் ளனர். இதை நம்பிய ஏராளமானோர் பொதுமக்கள் பல லட்சக்கணக்கான பணம் செலுத்தியுள்ளனர். இந்நிலையில், புதனன்று மாலை கடன் தொகை தருவதாக நிதி நிறுவனத்தி னர் சொன்னதை நம்பி முன்பணம் செலுத்தியவர்கள் வந்து பார்த்த போது, நிதி நிறுவனம் பூட்டிக் கிடந்ததால், மக்கள் ஏமாற்றமடைந்தனர். இதுகுறித்து போலீசார் கேட்ட போது, பணம் செலுத்தியவர்கள் யாரும் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவில்லை. புகார் பெற்று உரிய நடவடிக்கை எடுக் கப்படும் என்றனர். இதேபோல, இந்நிறுவனம் அன்னூர், சோமனூர், காங்கயம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு தற் போது பூட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜல்லிபட்டியில் மின்விநியோகத்தை முறைப்படுத்த கோரி கையெழுத்து இயக்கம்
திருப்பூர், அக்.11- ஜல்லிபட்டி புதுக்காலனி பகுதியில் மின் விநியோகத்தை முறைப்படுத்தக்கோரி இந் திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கையெ ழுத்து இயக்கம் நடத்தி மனுகொடுத்தனர். உடுமலை ஒன்றியம், ஜல்லிபட்டி புதுக் காலனி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறது. தொடர்ச்சி யாக முறையற்ற மின்விநியோகம் செய்யப் படுகிறது. இதனால் மின்விசிறி, மிக்சி, கிரைண் டர், அயர்ன் பாக்ஸ் உட்பட வீட்டு மின்சா தன பொருட்கள் அடிக்கடி பழுதாகிறது. மேலும் மின்கம்பத்தில் மேல் நிலைக்கம்பி கள் பழுதடைந்த நிலையில் உள்ளன. எனவே சீரான மின்சாரம் வழங்கவும், மேல்நிலைக் கம்பிகளை பராமரித்து மக்ககளுக்கு பாது காப்பு வழங்கவும் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் பொதுமக்களிடம் கையெழுத்துப் பெற்று தளி மின்வாரிய அலு வலக அதிகாரிகளிடம் மனு கொடுக்கப்பட் டது. இக்கோரிக்கை குறித்து பேசியபோது, உடனடியாக இப்பிரச்சனையில் தலையிட்டு மின் குறைபாட்டைச் சரி செய்வதாக அதிகாரி கள் உறுதி அளித்தனர். இதில் வாலிபர் சங்க உடுமலை ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சி. மாசானி, கே.அஜித்குமார், சுரேஸ், சின்ன கருப்புசாமி, கன்னிமுத்து, முருகேஸ் ரவி, கார்த்திக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மாணவர் உயிரிழப்பில் சந்தேகம்: உறவினர்கள் சாலை மறியல்
தருமபுரி, அக்.11- அரூர் அருகே உடல்நலம் பாதிக்கப் பட்ட மாணவர் சிகிச்சை பலனின்றி உயி ரிழந்த நிலையில், அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள சூரப்பட்டியைச் சேர்ந்தவர் கிரி (21). பாலிடெக்னிக் கல்லூரியில் முதலா மாண்டு படித்து வந்த இவருக்கு, கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற் பட்டது. இதனால் அரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றார். இதன்பின் வீட்டிற்கு சென்ற நிலையில், மீண்டும் அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக மெணசியில் உள்ள தனி யார் மருத்துவமனையில் சிகிச்சை பெற் றார். இதன்பின் ஏற்கனவே சிகிச்சை பெற்ற தனியார் மருத்துவமனைக்கு அவர் அழைத்து செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு, அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லு மாறு கூறியுள்ளனர். இதனால் அவரை அரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோ தித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இத னால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள், தவறான சிகிச்சையால் உயிரிழப்பு ஏற் பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ள தாக கூறி, இதுதொடர்பாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட்சியர் பெரு மாள், காவல் ஆய்வாளர் பாஸ்கர் பாபு உள்ளிட்ட அதிகாரிகள் மறியலில் ஈடு பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி னர். அப்போது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி யளிக்கப்பட்டது. அதனால் போராட் டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.
சத்தியமங்கலத்தில் 140 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
ஈரோடு, அக்.11- குற்ற சம்பவங்களை தடுக்க சத்திய மங்கலத்தில் 140 கண்காணிப்பு கேம ராக்கள் பொருத்தப்பட உள்ளது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்க காவல்துறை சார்பில் பல்வேறு நடவ டிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகி றது. அதன் ஒருபகுதியாக சத்தியமங்க லம் நகராட்சிக்குட்பட்ட திருநகர் காலனி, எஸ்ஆர்டி கார்னர், ரங்கசமுத்தி ரம், புதிய பேருந்து நிலையம் மற்றும் கோபி சாலையில் அரியப்பம்பாளை யம் வரையிலும், கோணமூலை ஊராட் சியில் காந்திநகர், கூத்தனூர் மற்றும் கோவை சாலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனை வரை யிலும் 140 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த திட்டமிடப்பட்டது. தற்போது அதற்கான பணிகள் தீவிரமாக நடை பெற்று வருகின்றன. இந்த கேமராக்க ளின் ஒட்டுமொத்த இணைப்புகளும் சத் தியமங்கலம் பேருந்து நிலைய வளா கத்தில் உள்ள புறக்காவல் நிலையத் தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப் பட்டு, அதில் 2 போலீசார் பணியமர்த்தப் பட்டு கண்காணிக்கப்பட உள்ளது. தற் போது பேருந்து நிலைய வளாகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கண் காணிப்பு கேமராக்கள் பதிவை கண் காணிப்பதற்காக எல்இடி தொலைக் காட்சிகள் பொருத்தப்பட்டுள்ளன. விரைவில் இந்த பணிகள் முடிக்கப்பட்டு சத்தியமங்கலம் நகரின் தெற்கு பகுதி முழுவதும் கண்காணிப்பு கேமராக்க ளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப் படும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓய்வூதியர்கள் குறைதீர் கூட்டம்
ஈரோடு, அக்.11- ஈரோட்டில், மாவட்ட கருவூல அலுவலர் (பொ) கோ. வெங்கடேசன் தலைமையில் ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம், ஆசிரியர், பிற ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் வ.பன்னீர்செல்வம் தலைமையில் ஓய்வதியர்கள் கலந்து கொண்டனர். அப்போது, மருத்துவ காப்பீடுத்திட்ட குறைபாடுகள், கோவிட் கால ஓய்வூதியர் நிலுவைத் தொகை காப்பீடு ஆகியவற்றை நிறுவனங்கள் 100 விழுக்காடு ரொக்க மாக வழங்க வேண்டும். மாவட்ட ஆட்சியர், மருத்துவ காப்பீடு நிறுவன அலுவலர், கருவூல அலுவலர் ஆகியோரை இணைத்து விரைவில் குறைதீர் கூட்டம் நடத்த வேண்டும். தாளவாடி வட் டத்தில் புதிய சார் நிலை கருவூலம் அமைக்க வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன. இக்கூட்டத்தில் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் சங்கரன், ஹரிதாஸ், பால சுப்ரமணியன், மணிபாரதி, கதிர்வேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சாலை விரிவாக்கம் செய்ய வலியுறுத்தி மறியல்
தருமபுரி, அக்.11- நல்லம்பள்ளி அருகே சாலை விரிவாக்கம் செய்ய வலியு றுத்தி அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத் தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே உள்ள நாகர் கூடல் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியில் மூசாகவுண்டன் கொட்டாய் பகுதியிலிருந்து மத்தாளபள்ளம் வழியாக நாகா வதி அணை வரை செல்லும் சாலை சுமார் 3 கிலோமீட்டர் தொலைவிற்கு உள்ளது. இப்பகுதியில் சுமார் 200க்கும் மேற் பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியின் பிர தான தொழிலாக விவசாயம் மட்டுமே உள்ளது. போக்கு வரத்து மற்றும் விளை பொருட்களை சந்தைப்படுத்துவ தற்காக சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு குறுகிய அளவிலான சாலை அமைக்கப்பட்டது. தற்போது விரிவுபடுத்தப்பட்ட சாலையாக அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்தனர். இதற்கு நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவல கம் சார்பில் சாலை பகுதி அமைந்துள்ள இடங்கள் அனைத் தும் பட்டா நிலங்களாக உள்ளதால், சாலைக்கு தேவையான அகலமான பகுதியை பொதுமக்கள் அரசுக்கு வழங்கும் பட்சத்தில் சாலை அமைக்கப்படும் என தெரிவித்தனர். இதற்கு அனைத்து பட்டா நில உரிமைதாரர்களும் ஒப்புக்கொண்ட நிலையில், ஒரு சிலர் மட்டும் ஏற்காததால் ஆவேசமடைந்த பொது மக்கள். ஒட்டு மொத்தமாக கிராமத்திற்கு செல்லும் சாலையை பள்ளம் தோண்டி துண்டித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த இண்டூர் போலீசார், நல்லம் பள்ளி வட்டாட்சியர் ஆறுமுகம், வட்டார வளர்ச்சி அலுவலர் லோகநாதன், நாகர்கூடல் ஊராட்சி மன்ற தலைவர் குமார் உள் ளிட்ட அதிகாரிகள் பொதுமக்களிடம் தொடர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நீங்கள் அனைவரும் ஒன்றிணைந்து நிலத்தை கொடுக்கும் பட்சத்தில் தான் அரசு உடனடியாக உங் களுக்கு சாலை அமைக்கும் பணியை ஏற்படுத்திக் கொடுக்க முடியும், என்றனர். பல மணி நேர பேச்சுவார்த்தைக்கு பின் அனைத்து பட்டா நில உரிமையாளர்களும் நிலத்தை அரசுக்கு வழங்க ஒப்புக்கொண்டனர்.