districts

img

கல்வித்துறை அலுவலர்கள் பெருந்திரள் முறையீடு

ஈரோடு, அக். 12- வேலை நேரத்தை முறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி கல்வித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். 10 ஆண்டு பணி முடித்த இள நிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர்க ளுக்கு உதவியாளர் பதவி உயர்வு வழங்க வேண்டும். பட்டப்படிப்பு மற்றும் பிஎட் முடித்த தகுதி பெற்ற அமைச்சு பணியாளர்களுக்கு வட்டாரக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் பணி வழங்க வேண்டும். பள்ளிக ளில் பணியாற்றும் அமைச்சு பணியாளர்க ளின் வேலை நேரத்தை 10 முதல் 5.45 வரை யாக மாற்றியமைக்க வேண்டும். மாதிரி பள்ளி களில் பணியாற்றும் அமைச்சு பணியாளர்க ளுக்கு காலமுறை ஊதியம் வழங்கி நிரந்தரப் படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம், முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் வியாழனன்று நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலா ளர் பி.பழனிவேல் தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ச.விஜயமனோகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் கல்வி அதிகாரியிடம் மனு கொடுக் கப்பட்டது.