districts

img

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளி கேள்விக்குறியாகும் மாணவர்களின் கல்வி

நாமக்கல், ஜூலை 24- அரசு நிர்ணயித்த கல்வி கட்ட ணத்திற்கு பதிலாக கூடுதல் கட்ட ணம் வசூலிக்கும் தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு பெற்றோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், எலச்சி பாளையம் ஒன்றியம், லத்துவா டியை அடுத்த செலமகவுண்டம்பா ளையம் பகுதியைச் சேர்ந்தவர் பூசன் (45). கிராம ஊராட்சி துணைத் தலைவரான இவரது மகன் சத்யா னந் (15), வேலகவுண்டம்பட்டியில் உள்ள தனியார் கொங்குநாடு மெட் ரிக் மேல்நிலைப்பள்ளியில் 4 ஆம் வகுப்பு முதல் சேர்ந்து படித்து வந் தார். இவர் 11 ஆம் வகுப்பில் சேரு வதற்கு இதே நிறுவனத்தில் வகுப்பு  சேர்க்கை மூலம் பதிவு செய்தார். அப்போது, 11 ஆம் வகுப்பு கல்வி  கட்டணம் ரூ.45 ஆயிரம் கட்ட வேண் டும் என பள்ளி நிர்வாகம் பெற்றோ ரிடம் கூறியுள்ளது. அதற்கு அரசு நிர் ணித்த கட்டணமான ரூ.16 ஆயிரத்து 95 ரூபாய் மட்டுமே கட்டுவேன் என  பூசன் (45) கூறியதால், சத்யானந் திற்கு அப்பள்ளியில் பயில்வதற் கான வாய்ப்பு நிராகரிக்கப்பட்டது.  மேலும், பள்ளி நிர்வாகத்தினர், மாண வனை பள்ளியிலிருந்து வெளி யேற்றி, உளவியல் ரீதியாக சித்தர வதை செய்துள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட குழந் தைகள் நல அலுவலர் மாவட்ட ஆட் சியர் என பல்வேறு துறைகளுக்கு  பூசன் புகார் மனு அளித்தார். ஆனால் சிறு விசாரணையும் கூட மேற்கொள் ளவில்லை என தெரிகிறது. இந்நிலை யில், பெற்றோர்கள் மார்க்சிஸ்ட்  கட்சியிடம் விபரங்களை தெரிவித் தனர். இதனையடுத்து மாவட்ட செயற்குழு உறுப்பினரும், ஒன்றிய கவுன்சிலருமான சு.சுரேஷ் தலை மையில் பெற்றோர்கள் சனியன்று  காலை நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு காத்தி ருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து பூசன் கூறுகை யில், எனது மகன் சத்யானந்த் கொங்குநாடு மெட்ரிக் பள்ளியிலி ருந்து, அவரது பள்ளிச்சான்றிதழை கொடுத்து வெளியேற்றி விட்டனர். இதனால் எனது மகன் போன்ற ஏரா ளமான மாணவர்களின் கல்வி கேள் விக்குறியாகி உள்ளது. எனவே, இதே கல்வி நிலையத்தில் எனது மகன் கல்வி தொடரவும், கணக்கு அறிவியல் பிரிவு படிக்க வழிவகை செய்ய வேண்டும், என்றார். இப்போராட்டம் குறித்து தகவல றிந்த நாமக்கல் காவல் ஆய்வாளர் சங்கரபாண்டியன் தலைமையில் கிராம நிர்வாக அலுவலர் வீரா சாமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உதவியாளர் ஆகியோர் சனியன்று இரவு பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். அப்போது, திங் களன்று தீர்வு காணுவதாக அதிகாரி கள் உத்தரவாதம் அளித்தனர். இத னடிப்படையில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். முன்னதாக, இப்பேச்சுவார்த்தை யின் போது சிஐடியு மாவட்ட செய லாளர் ந.வேலுசாமி,  மாவட்ட உதவி செயலாளர் கு.சிவராஜ், சாலை போக் குவரத்து மாவட்ட துணை செயலா ளர் மாதேஸ்வரன் ஆகியோர் உட னிருந்தனர்.