திருப்பூர், ஜூலை 9 - திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதி களில் உள்ள பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் தங்கள் வீடு மற்றும் பள்ளிகளில் பயன் படுத்தப்படாத மின்னணு கழிவுகளை மாநகராட்சியில் ஒப்படைத்து பணம் பெற்றுக் கொண்டனர். திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதி களில் மின்னணு கழிவுகளை ஆங்காங்கே விட்டுச் செல்லாமல் ஒருசேர சேகரிக்கும் திட் டம் கடந்த ஆண்டு துவங்கப்பட்டது. திருப்பூர் மாநகராட்சி மற்றும் துப்புரவாளன் அமைப்பு மூலம் துவங்கப்பட்ட இத்திட்டம் சனியன்று இரண்டாவது முறையாக சிறப்பு முகாமாக மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. பொதுமக்கள் தங்கள் வீடு மற்றும் நிறுவ னங்களில் உள்ள பயன்படுத்தாத பேட்டரி, கணினி உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங் களை இந்த முகாமில் கொடுத்து பணமாக பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட் டிருந்தது. குப்பைகளை ஆங்காங்கே விட்டுச் செல்லாமல் பிளாஸ்டிக் மற்றும் எலக்ட்ரானிக் கழிவுகளை தரம் பிரித்து அனுப்புவதன் மூலம் பொதுமக்கள் அதனை பணமாகவும் மாற்றிக் கொள்வதோடு இயற்கைக்கு கேடு விளைவிக்காத வகையில் அமைத்துக் கொள் ளலாம் எனவும் மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடி தெரிவித்திருந்தனர் . இதனையடுத்து சனியன்று மாநக ராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடுகள் நிறுவனங்கள் மற்றும் பள்ளி கல்லூரி சேர்ந்த மாணவ மாணவிகள் பயன்படுத்தப்படாத மின்னணு கழிவுகளை மாநகராட்சியில் ஒப்படைத்து பணத்தை பெற்றுக் கொண்டனர் இந்நிகழ்வின் மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடி, துணை மேயர் பாலசுப்ரம ணியம் உள்ளிட்டார் கலந்து கொண்டனர். மாநகராட்சி நடத்திய மின்னணுக்கழிவு சேகரிப்பு முகாமில் 980 கிலோ மின்னணுக் கழிவுகள் வாங்கப்பட்டு ரூபாய் 12000 கொடுக்கப்பட்டது. மேலும் 500 கிலோ அளவுக்கு மின்னணு கழிவுகளை கொடுப்பதற்கான விசாரணை நடைபெற் றது.