districts

img

மீண்டும் குப்பைகிடங்கு – பொதுமக்கள் போராட்டம்

கோவை, மார்ச்.1- கோவை எருக் கம்பெனி பகுதி யில் மீண்டும் குப்பைக்கிடங்கு கொண் டுவரப்பட்டதை அடுத்து, பொதுமக் கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரப ரப்பு ஏற்பட்டது. கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட  எருக் கம்பெனி பகுதியில், சில வருடத் திற்கு முன்பு குப்பை கிடங்கு செயல் பட்டு வந்தது. இந்த நிலையில், அப்ப குதி மக்களின் பலகட்ட போராட்டங்க ளுக்கு பிறகு குப்பை கிடங்கு, வெள்ள லூர் பகுதிக்கு மாற்றம் செய்யப்பட் டது.

 இந்த நிலையில், கடந்த சில மாதங்க ளாக மீண்டும் எருக் கம்பெனி பகுதி யில், கோவை மாநகராட்சிக்கு சொந்த மான பகுதியில் குப்பைகள் கொட்டப் பட்டு, குப்பைகள் தரம் பிரிப்பது மற்றும்  தீ வைத்து எரிப்பது போன்ற நிகழ்வு கள் நடந்து வருகிறது.  இதற்கு அந்தப் பகுதியைச் சேர்ந்த  பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித் துள்ளனர்.

மேலும், குப்பைகள் தொடர்ந்து கொட்டப்பட்டு வருவதால்,  அதில் இருந்து ஏற்படும் காற்று மாசு,  துர்நாற்றம் காரணமாக பல்வேறு உடல் நலப் பாதிப்புகள் ஏற்படுவதாகக் கூறி  அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு, திடீரென போராட் டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த  மாநகராட்சி அதிகாரிகள், இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்த போதும் போராட்டத்தை கைவிட மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

  அதனை தொடர்ந்து போலீசார் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட வர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி யதை அடுத்து, கலைந்து சென்றனர். இது குறித்து அப்பகுதி மக்கள் மீண் டும் மாநகராட்சி ஆணையரிடம் மனு அளிக்க உள்ளதாகவும், அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டனர்.