உதகை, அக்.22- தொடர் விடுமுறையால் ஞாயி றன்று உதகையில் சுற்றுலா பயணி குவிந்த நிலையில், கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்ற்பட்டது. இந்தியாவின் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக காணப்படுவது உதகையாகும். அதிக மலைப் பகுதிகள் நிறைந்த நீலகிரி மாவட் டத்தில் அமைந்துள்ளது. இது கிழக்கு தொடர்ச்சி மலைகளும், மேற்கு தொடர்ச்சி மலைகளும் சங்கமிக்கும் மத்திய பகுதியில் அமைந்துள்ளது. கடல் மட்டத் திலிருந்து 7500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு அதிகமாக 11 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையே நிலவுகிறது. இந்தியா வில் உள்ள மலை வாசஸ்தலங்கள் ஒன்றான உதகையில் எப்போதும் இதமான காலநிலை மற்றும் இயற்கை வளங்கள் மிகுந்த வனப் பகுதிகள் பல காணப்படுவதால் இந்தியாவின் பிற மாவட்டங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந் தும் அதிகப்படியான சுற்றுலா பயணிகள் இங்கு வருகின்றனர். குறிப்பாக அரசு தாவரவியல் பூங்கா, உதகமண்டலம் ஏரி, பைன் வன வருகை, மான் பூங்கா, பனிச் சரிவு ஏரி, தொட்டாபெட்டா எனும் உயர்ந்த சிகரம், கேத்தி பள்ளத் தாக்கு, மேல் பவானி ஏரி, எமரால்டு ஏரி, புனித ஸ்டீபன் தேவாலயம், படப்பிடிப்பு மையம் என பல சுற் றுலா இடங்களை ஒரே இடத்தில் கொண்டு இயற்கை வளங்களோடு காணப்படுகிறது. நீலகிரியில், இரண்டாம் சீசன் களை கட்டியுள்ள நிலையில், உதகை தாவரவியல் பூங்காவில், மலர்கள் வண்ண மயமாக காட்சி அளிக்கின்றன. ஒரு மாத காலம் நடக்கும், இரண்டாவது சீசனில், 3 லட்சம் சுற்றுலா பயணிகள் வருவர் என தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் எதிர்பார்த்துள் ளனர். இந்நிலையில், ஆயுத பூஜை தொடர் விடுமுறை காரணமாக, உதகைக்கு வரும் சுற்றுலா பயணி களின் கூட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, கேரளா, கர்நாடக மாநில சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகின்றனர். வெள்ளியன்று மட்டும், உதகை தாவரவியல் பூங்காவுக்கு 10 ஆயி ரத்து 503 பார்வையாளர்கள் வந்து சென்றுள்ளனர். அதே போன்று, உதகை படகு இல்லம், பைகாரா, படப்பிடிப்பு மையம், தொட்ட பெட்டா உட்பட சுற்றுலா பகுதி களில் கூட்டம் அலைமோதியது.