கோவை, பிப்.8- கோவை புறநகரப் பகுதிகளில் பேருந்து கள் பற்றாக்குறை காரணமாக, பள்ளி, கல்லூ ரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் தனியார் பேருந்துகளின் படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான நிலையில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். கோவை புறநகர பகுதியான அன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து கோவை மற்றும் திருப்பூர் பகுதிக ளுக்கு செல்லும் பள்ளி, கல்லூரி மாண வர்கள் மற்றும் வேலைக்கு செல்வோர் பெரும்பாலும் பொது போக்குவரத்தையே நம்பி உள்ளனர். இந்நிலையில் அன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை இருந்து குறைந்த அளவிலான பேருந்து கள் மட்டுமே நகரப் பகுதிகளுக்கு இயக்கப்ப டுகின்றன. இதன் காரணமாக காலை மற்றும் மாலை வேலைகளில் தனியார் பேருந்துக ளில் பயணிக்கும் பள்ளி, கல்லூரி மாணவர் கள் விபரீதத்தை உணராமல் படிக்கட்டுக ளில் தொங்கியபடி பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அன்னூர் போலீசார் அவ்வப்போது பேருந்துகளை தடுத்து நிறுத்தி மாணவ மாணவிகளுக்கு அறிவுரை வழங்குவது, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மூலம் பேருந்து ஊழியர்களுக்கு அபராதம் விதிப் பது, வழக்கு பதிவு செய்வது என பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்தாலும், பேருந்துகள் பற்றாக்குறை காரணமாக, வேறு வழியின்றி மாணவ மாணவிகள் தனி யார் பேருந்துகளில் தொங்கியபடி பயணிப் பது தவிர்க்க முடியாததாக இருக்கிறது. எனவே, அசம்பாவிதங்கள் நிகழ்வதற்கு முன்பாக அரசு போக்குவரத்து கழக அதிகாரி கள் அன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து காலை மற்றும் மாலை வேலைகளில் கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.