சிஐடியு ஆர்ப்பாட்டம் சேலம், ஏப்.17- தமிழக அரசு தொழிற்சாலை சட்ட திருத்தத்தை கைவிட வலியுறுத்தி இந்திய தொழிற்சங்க மையம் (சிஐ டியு) சார்பில் திங்களன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொழிலாளர்களின் வாழ்வாதா ரத்தை பாதுகாக்கும் எட்டு மணி நேர வேலை சட்டத்தை பறிக்கும் வகை யில், தமிழக அரசு சட்ட முன் வரைவு கொண்டு வந்துள்ளது. தொழிலாளர் களுக்கு விரோதமான இந்த தொழிற் சாலை சட்ட திருத்தத்தை கைவிட வேண்டும் என சேலம் மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு மாவட்ட துணைத்தலை வர் பி.பன்னீர்செல்வம் தலைமை யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தொழிலாளர்கள் போராடி பெற்ற சட் டத்தை திருத்தக்கூடாது, ஒன்றிய அர சின் தொழிலாளர் விரோத கொள்கை களை பின்பற்றக்கூடாது. அனைவ ருக்கும் 8 மணி நேர வேலையை உத் தரவாதம் படுத்த வேண்டும். 12 மணி நேரமாக வேலையை உயர்த்தக் கூடாது. தமிழக சட்டமன்றத்தில் கொண்டு வந்த இந்த தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும். குறிப்பாக 1948ல் கொண்டு வந்த தொழிலாளர் நல சட்டத்தை மாற்றி அமைக்கும் வகையில் கொண்டு வந்த தீர்மா னத்தை ரத்து செய்ய வேண்டும் என கண்டன முழக்கங்களை எழுப்பி னர். முன்னதாக ஆர்ப்பாட்டத்தில், சிஐடியு மாவட்ட செயலாளர் ஏ. கோவிந்தன், மாவட்ட பொருளாளர் இளங்கோ, மாநில துணைத்தலை வர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட திர ளானோர் பங்கேற்றனர். தருமபுரி தருமபுரி மேற்பார்வை பொறியா ளர் அலுவலகம் முன்பு சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட் டத்திற்கு மாநிலதுணைத்தலைவர் பி.ஜீவா தலைமை ஏற்றார். மாவட்ட செயலாளர் தீ.லெனின் மகேந்திரன், மாவட்ட பொருளாளர் சீனிவாசன், கோட்ட நிர்வாகிகள் காளியப்பன் ஜெகன் கோவிந்தன் உள்ளிட்ட திர ளானோர் பங்கேற்றனர்.