ஈரோடு, டிச.21- ஆட்டோ நிறுத்துவதில் ஏற்பட்ட பிரச் சனை காரணமாக, வீதியில் ஆட்டோவை நிறுத்தி ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடு பட்டனர். ஈரோடு வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள சிவசண்முகம் வீதியில் சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக பய ணிகள் ஆட்டோ நிறுத்தம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆட்டோ நிறுத்தத்தில் இடப்பற்றாக்குறை காரணமாக ஒரு ஆட்டோ மட்டும் நிறுத்தி வைத்து, அந்த ஆட்டோ வாடகைக்குச் சென்றதும் மற் றொரு ஆட்டோ நிறுத்தி வந்தனர். ஆட்டோ நிறுத்தப்படும் இடமானது தனி யார் நகைக்கடையின் முகப்பு பகுதி யாக உள்ளது. இதனால், அந்த நகைக் கடையின் உரிமையாளர் ஆட்டோ நிறுத் தக்கூடாது எனக்கூறியுள்ளார். இத னைக் கண்டித்து சிவசண்முகம் வீதியில் ஆட்டோவை நிறுத்தி ஆட்டோ ஓட்டுநர் கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத் துக்கு வந்த ஈரோடு நகர காவல் நிலைய ஆய்வாளர் தெய்வராணி தலைமையி லான போலீசார், ஆட்டோ ஓட்டுநர்களு டன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப் போது, ஆட்டோ ஓட்டுநர்கள் பேசுகை யில், நாங்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த இடத்தில் ஆட்டோ நிறுத்தி வாடகை எடுத்து வருகிறோம். இந்த இடம் எங்களது வாழ்வாதரமான இடம். இதே இடத்தில் ஆட்டோ நிறுத்த அனுமதி வாங்கித்தருமாறு கூறினர். இதையடுத்து, கடை நிர்வாகிகளிடம் பேசி, ஆட்டோ ஓட்டுநர்களை வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் தொடர்ந்து நிறுத்திக் கொள்ள ஆய்வாளர் அனுமதித்தார். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் கலைந்து சென்ற னர்.