districts

img

மோட்டார் வாகனச் சட்டத்தை கண்டித்து ஓட்டுநர்கள் போராட்டம்

சேலம், ஜன.22- ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள புதிய மோட்டார் வாகனச் சட்டத்தை கண்டித்து மேட்டூரில் வாகன ஓட்டு நர்கள் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற் காமல் செல்லும் ஓட்டுநர்கள் மீது ரூ.10 லட்சம் அபராதம் மற்றும் 7  ஆண்டு சிறை தண்டனை விதிக்கும் வகையில், ஒன்றிய அரசு புதிய வாகன சட்டத்தை கொண்டு வந்துள் ளது.  இதனை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். பணியில் இருக்கும்  ஓட்டுநர்களை தாக்கும் நபர் யாராக இருந்தாலும் சட்ட நடவடிக்கை எடுத்து ஓட்டுனர்களின் பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும். லாரி ஓட்டு நர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும். கையொப்பம் இல்லா மல் ஆன்லைன் அபராதம் விதிப் பதை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள ஸ்ரீநகர் பேருந்து நிறுத்தம் அருகே அனைத்து வாகன ஓட்டுநர்கள் நலசங்கம் சார்பில் கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது.  இப்போராட்டத்திற்கு லாரி உரி மையாளர் சம்மேளன தலைவர் முரு கன் வெங்கடாஜலம் தலைமை வகித் தார். இதில் மேட்டூர் தாலுகா அனைத்து வாகன ஓட்டுநர்கள் நலசங்கத் தலை வர் ராஜேந்திரன், செயலாளர் ஜெயக் குமார், பொருளாளர் பூபதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.