districts

img

குடிநீர் இணைப்பு கட்டணத்தை குறைத்திடுக

சிபிஎம் ஆர்ப்பாட்டம் பென்னாகரம், செப்.29- பாப்பாரப்பட்டி பேரூராட்சியில் குடிநீர் கட் டணம் மற்றும் இணைப்பு கட்டணம் ஆகிய வற்றை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. கட்டட உரிமைக்கட்டண உயர்வைக் கைவிட வேண்டும். நூறுநாள் வேலைத்திட் டத்தை அமலாக்க வேண்டும். விண்ணப் பித்த அனைவருக்கும் இலவச வீடு வழங்கும் திட்டத்தில் வீடு வழங்க வேண்டும். மோர வள்ளி பகுதிக்கு சாலை அமைக்க வேண் டும். பேரூராட்சி பகுதி முழுவதும் தெரு விளக்கு, சாலை, கழிவுநீர் கால்வாய் உள் ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர  வேண்டும். கூடுதல் தூய்மைப் பணியாளர் கள் நியமித்து, குப்பைகளைக் கையாள கூடு தலாக வாகனங்களை கொள்முதல் செய்ய  வேண்டும். சின்ன ஏரியை தூர்வாரி மேம் படுத்தும் பணியை விரைந்து முடிக்க வேண்டும். சாலையோர வியாபாரிகளுக்கு கடை நடத்த இடம் ஒதுக்கிட ‘வெண்டிங் கார்டு’ வழங்க வேண்டும். பேரூராட்சி சமு தாயக்கூடத்தை புதுப்பித்து ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் வாட கைக்கு விட வேண்டும். பாப்பாரப்பட்டி பேரூ ராட்சியில் வசூலிக்கப்படும் குடிநீர் கட்டணம் மற்றும் இணைப்பு கட்டணத்தை குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாப்பாரப்பட்டி பேரூராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சி யின் பகுதிக்குழு உறுப்பினர் எம்.சிலம்பர சன் தலைமை வகித்தார். பகுதிக்குழு உறுப் பினர்கள் கே.லோகநாதன், ஆர்.சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சி.நாகராஜன், வே.விசுவநாதன் ஆகியோர் கோரிக்கை களை விளக்கி உரையாற்றினர். இதில் பகுதிக் குழு செயலாளர் இரா.சின்னசாமி, மாவட்டக் குழு உறுப்பினர் டி.ஆர்.சின்னசாமி, பகுதிக் குழு உறுப்பினர் அன்பரசு, காங்கிரஸ் கட்சி யின் மாவட்ட பொதுச்செயலாளர் முத்து, மாதர் சங்க துணைத்தலைவர் உமாராணி,  தலைவர் கீதா பிரியா, கிளைச்செயலாளர் கள் மாதப்பன், ரஜினி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.