districts

img

கழிவுநீர் கால்வாயில் குடிநீர் குழாய்

பள்ளிபாளையம், ஜுன் 3- குமாரபாளையம் அருகே கழிவுநீர் கால்வாயின் உள்ளே  அமைக்கப்பட்டுள்ள குழாயில் குடிநீர் பிடிக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.  நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே வெப் படை பகுதியில் உள்ள எலந்தைகுட்டை ஊராட்சிக்குட்பட்ட  சௌடேஸ்வரி நகர் பகுதியில் சுமார் 30க்கும் மேற்பட்ட  குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் பொது மக்கள் குடிநீர் தேவைக்காக குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழாய், சாலையோரத்தில் உள்ள கழிவுநீர் கால்வாயில்  உள்ளது. இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில், இந்த குழா யில் இருந்துதான் 10 ஆண்டுகளாக குடிநீர் பிடித்து வரு கிறோம். கால்வாயில் அதிகளவு கழிவுநீர் செல்லும் போது குடிநீர் சுகாதாரமற்றதாக இருக்கிறது. நோய் தொற்று பரவும்  அபாயம் இருக்கிறது என தெரிந்தாலும் வேறு வழியில் லாமல் இந்த தண்ணீரையே பிடித்து வருகிறோம். இது  குறித்து பலமுறை ஊராட்சி அலுவலகத்தில் புகார் அளித் தோம். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. இப்போதாவது, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தலையீட்டு குடிநீர் குழாயினை மாற்று இடத்தில் அமைக்க வேண்டும் என்றனர்.