பென்னாகரம், பிப்.2- ஏரியூர் அரசு பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் சார்பில் குடிநீர் தொட்டி அமைத்து தரப்பட்டது. பென்னாகரம் அருகே உள்ள ஏரியூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் 900க்கும் மேற்பட்ட மாணவ, மாண விகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில், அப்பள்ளியில் அமைந்திருந்த குடிநீர் தொட்டிகள் அனைத்தும் பழுதடைந்ததால், குடிநீர் தட்டுப்பாடு ஏற் பட்டு வந்தது. இதனால் பள்ளி மாணவர்கள் பெரும் இன்னலுக்கு உள்ளாகி வந்த நிலையில், அதுகுறித்து அறிந்த அப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து, ரூ.90 ஆயிரம் மதிப்பீட்டில் குடிநீர் தொட்டி அமைத்து கொடுத்தனர். இதன் திறப்பு நிகழ்ச்சி தலைமையாசிரியர் தமிழ்வேல், துணைத் தலைமை யாசிரியர் சித்தன் தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னாள், இந்நாள் மாணவர்கள் உட்பட திரளா னோர் கலந்து கொண்டனர்.