திரவிடத்தமிழர் கட்சி இந்தியா கூட்ட ணியை முழுமையாக ஆதரிப்பது, இக் கூட்டணியின் வெற்றிக்கு உழைப்பது என் கிற தீர்மானத்தை திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினிடம் அக்கட்சியின் நிறுவனத்தலைவர் வழக்க றிஞர் சி.வெண்மணி உள்ளிட்ட நிர்வாகி கள் ஆதரவு கடிதம் அளித்தனர். இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் சி.வெண்மணி கூறுகையில், இந்திய ஒன்றியத்தை ஆட்சிச்செய்யும் ஆர்எஸ் எஸ், பாஜக. சங்பரிவார் கும்பல்கள் கடந்த 10 ஆண்டுகளாக நாட்டில் மதவெறி, சாதி வெறி, அரசியல் உணர்வை உருவாக்கி வெறுப்பு அரசியலையும், சாதிய அரசிய லையும் முன்னிறுத்தி நாட்டை பிளவுப் படுத்தி வருகிறது. நாடு முழுவதும் தலித் மற்றும் சிறுபான்மையினர் மக்கள் மீது கும்பல் வன்முறை, பாலியல் வன்முறை, கொலை, சொத்துக்கள் சூறையாடுதல் உள்பட்ட பல்வேறு வன்முறை சம்பவங் களை திட்டமிட்டு அரங்கேற்றப்படுகிறது. அதனால் இந்திய ஒன்றியம் முழுவதும் உள்ள தலித் மற்றும் சிறுபான்மையினர் மக்கள் எவ்விதமான பாதுகாப்புமின்றி வாழ்ந்து வரும் அபாய நிலை ஏற்பட்டுள் ளது. மோடி அரசு பொதுத்துறை நிறு வனங்கள் அனைத்தையும் அம்பானி, அதானி மற்றும் தனியார் பெரும் முதலாளி களுக்கு தாரைவார்த்து பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல், பழங்குடி மக்களின் வேலைவாய்ப்பு உரிமையை தட்டி பறிக்கிறது. எனவே, மாநில அரசின் உரிமைகளை பாதுகாக்கவும், பட்டியல் மற்றும் பழங்குடி பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு உரிமைகளை பாதுகாக்க வும், சிறுபான்மை மக்களுக்கு எதிராக உருவாக்கப்படும் வெறுப்பு அரசியலை சமூகத்திலிருந்து அடியோடு வீழ்த்தவும், இந்தியா கூட்டணியை, 2024 நாடாளுமன்ற தேர்தலில் ஆதரித்து நாடு முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி நாடாளுமன்ற தொகு திகள் 40/40திலும் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான இந்தியா கூட்ட ணியை பெருவாரிய வாக்கு வித்தியாசத் தில் வெற்றி அடைய செய்ய திராவிடத் தமிழர் கட்சி துணை நிற்கும் என்றார்.