ஈரோடு, ஜூலை 19- சத்தியமங்கலம் அருகே நாட கத்தின் போது மேடையிலேயே கலைஞர் ஒருவர் உயிரிந்த சம்ப வம் அப்பகுதி பொதுமக்களி டையே பெரும் சோகத்தை ஏற் படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், சத்தியமங் கலத்தை அடுத்து குப்பன்துறை கிராமம் உள்ளது. இந்த கிராமத் தில் ஆண்டுதோறும் மழை வேண்டி இரணியன் நாடகம் நடத்துவது வழக்கம். இந்த நாடகத்தில் அதே ஊரை சேர்ந்த ராஜய்யன் (62) என்பவர் முன்நின்று நடத்துவதோடு அவரும் நாடகத்தில் நரசிம்மன் வேடத்திலும், நாரதர் வேடத்திலும் நடித்து வந்தார். இவருடைய பாடலையும், நடிப்பையும் பல ரும் ரசிப்பதால், பல வருடங்களாக இந்த நாடகம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதேபோல் இந்த வருடத்திற்கான நாடகம் ஞாயிறன்று இரவு தொடங்கியது. ராஜய்யன் நாடகத்தில் பங்கேற்று பாட்டு பாடியபடி நடித்துக் கொண்டிருந்தார். இந்நிலையில், திங்களன்று அதிகாலை 3 மணியளவில் ராஜய்யன் நாடகத்தில் உச்சகட்டத்தில் பாடி கொண்டு நடனம் ஆடி கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் ஒரு நிமிடம் அப்படியே நின்றார். அடுத்த சில விநாடியி லேயே அவர் அப்படியே சரிந்து கீழே விழுந்தார். இதனால், அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரி சோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே ராஜய்யன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். அப்போது ராஜய்யன் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தது தெரியவந்தது. இதன்பின் அவரது உடல் குப்பன்துறைக்கு எடுத்து செல்லப்பட்டு, அவரது உடலுக்கு ஏராளமான நாடக நடிகர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத் தினர்.