districts

img

தேர்தல் வருவதால் சிலிண்டர் விலை குறைப்பு நாடகம் - பி.ஆர்.நடராஜன் எம்.பி., சாடல்

பி.ஆர்.நடராஜன் எம்.பி., சாடல் கோவை, மார்ச் 8- ரூ.400 விலை இருந்த சிலிண்டர்  உருளை விலையை ஆயிரம் ரூபாய்க்கு ஏற்றிவிட்டு, மகளிர்  தினத்திற்காக ரூ.100 குறைப்பதாக சொல்வது மோடி அரசின் அப்பட்ட மான நாடகம் என கோவை நாடா ளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடரா ஜன் குற்றம்சாட்டினார். கோவை மாவட்டம், சூலூர் பேரூராட்சிக்குட்பட்ட மதியழகன் நகர் பகுதி உள்ளது. இங்கு நாடா ளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம் பாட்டு நிதி மற்றும் பேரூராட்சி பொது நிதியிலிருந்து சமுதாய நலக்கூடம் கட்ட சுமார் 70 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பணிகள்  முடிவடைந்த நிலையில், கட்டி  முடிக்கப்பட்ட சமுதாய நலக்கூ டத்தை கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வெள் ளியன்று திறந்து வைத்து, பொது மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு  வந்தார். மேலும், நமக்கு நாமே திட் டத்தின் கீழ் சூலூர் பேரூராட்சி, 7  ஆவது வார்டுக்குட்பட்ட வையாபுரி வீதி, கதிரான் வீதி, ஆறுமுகம் வீதி,  மாகாளி வீதி ஆகிய இடங்களில் ரூபாய் 17 லட்சம் மதிப்பீட்டில் வடி கால்கள் அமைத்தல் மற்றும் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் பேரூராட்சி படகு துறையில் தடுப்புச்சுவர் அமைத்தல் ஆகிய பணிகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் அடிக்கல் நாட்டினார்.  இதுகுறித்து பி.ஆர்.நடராஜன்  எம்.பி., கூறுகையில், கடந்த 5 ஆண்டு களில் மட்டும் கோவை நாடாளு மன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதி களில் சுமார் 51 சமுதாய நலக்கூடங் கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி முழுமையாக பயன்படுத்தி வரு கிறோம். ஒவ்வொரு திட்டத்தின் பல னும் பொதுமக்களின் பயன்பாட் டிற்கு சென்று சேர வேண்டும் என்று பார்த்துப்பார்த்து செய்து வருகி றோம். தனி விமானம் வாங்கவும், நாடாளுமன்றம் கட்டவும் பெருந் தொகை செலவு செய்த மோடி அரசு, ஏழை எளிய உழைப்பாளி மக்கள் நேரிடையாக பயன்பெரும் திட்டத் திற்காக நாடாளுமன்ற உறுப்பினர் களுக்கு ஒதுக்கப்படும் நிதியை  ஒன்றிய மோடி அரசு கொரோனாவை காரணம் காட்டி இரண்டு ஆண்டு கள் ரத்து செய்து விட்டது. அந்த தொகையும் கிடைத்திருந்தால் இன் னும் பல திட்டங்களை கொண்டு  வந்திருக்க முடியும். கார்ப்ரேட்டுக ளுக்கு அள்ளிக்கொடுப்பதும், அவர் களுக்காகவே திட்டங்கள் போடுவ தும் மோடி அரசின் பிரதான வேலை யாக உள்ளது. எளிய மக்களின் மீது எந்த அக்கறையும் செலுத்தாத மோடியின் ஆட்சிக்கு இந்த தேர் தல் முடிவுரை எழுதும் என்றார்.

இதனையடுத்து செய்தியாளர் களுக்கு பேட்டியளித்த பி.ஆர்.நட ராஜன் எம்பி., உழைக்கும் மகளிர் அனைவருக்கும் சர்வதேச மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மகளிர் தினம் என்ப தற்காக ஒன்றிய அரசு சிலிண்ட ருக்கு 100 ரூபாய் விலை குறைப்பு நடவடிக்கை மேற்கொண்டுள்ள தாக தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மகளிர் தினம் வந்து  கொண்டே இருக்கிறது. அப்போது எந்த ஞானமும் மோடிக்கு வர வில்லை. கடந்த காலங்களில் சிலிண் டருக்கு விலை உயர்வு மட்டுமே ஒன்றிய அரசு உயர்த்திக் கொண்டி ருந்ததை, மக்கள் யாரும் மறக்க மாட்டார்கள். நாடாளுமன்றத் தேர் தலை கண்டு அஞ்சுவதன் காரணமா கவே மகளிர் தினம் என்ற போர்வை யில் இந்த நடவடிக்கை மேற்கொள் ளப்பட்டுள்ளது. கோவை நாடாளுமன்ற உறுப் பினரை காணவில்லை என்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை யின் விமர்சனம் குறித்த செய்தி யாளர்களின் கேள்விக்கு, மக்களை யும், அவர்களது பிரச்சனைகளை யும் பார்ப்பது மட்டும் தான் என்னு டைய பணி, மாறாக தினமும் அண் ணாமலையை பார்ப்பது அல்ல.  பொழுது போகாமல் இது போன்று  பேசி வருவதாக தெரிவித்தார். இந் நிகழ்ச்சியில், சூலூர் பேரூராட்சி தலைவர் தேவி மன்னவன், மார்க் சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட செயற்குழு உறுப்பினர் யு.கே சிவ ஞானம், ஒன்றியச் செயலாளர் ஏ.சந் திரன், சூலூர் பேரூராட்சி 7ஆவது வார்டு உறுப்பினர் வேலுச்சாமி, பேரூராட்சி செயல் அலுவலர் சதீஷ் குமார் உட்பட அப்பகுதி மக்கள் திர ளானோர் கலந்து கொண்டனர்.