districts

img

டாக்டர் அம்பேத்கர் பயிற்சி மையம் சார்பில் இலவச பயிற்சி வகுப்புகள் துவக்கம்

கோவை, பிப்.2- டாக்டர் அம்பேத்கர் கல்வி வேலை வாய்ப்பு பயிற்சி மையமும், அகில இந்திய இன்சுரன்ஸ் ஊழியர்கள் சங் கம் இணைந்து நடத்தும்  காப் பீட்டு கழக உதவி நிர்வாக அதிகாரி மற்றும் வளர்ச்சி அதிகாரிகளுக்கான பணித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் வியாழனன்று கோவையில் துவங்கப்பட்டுள்ளது. விளிம்பு நிலை மாணவர்கள் பயன்பெறு கிற வகையில், தொடர்ந்து பல்வேறு அரசு பணித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகளை அம்பேத்கர் கல்வி வேலை வாய்ப்பு பயிற்சி மையம் சார்பில் நடைபெற்று வருகிறது. இந்தாண்டு காப்பீட்டு கழக உதவி நிர்வாக அதிகாரி மற்றும் வளர்ச்சி அதிகாரி பணிகளுக்கான பயிற்சி வகுப்புகள் கோவை  அகில இந்திய இன்சுரன்ஸ் ஊழியர்கள் சங்க  அலுவலகமான சரோஜ் பவனியில் துவங்கப் பட்டது.  துவக்க நிகழ்ச்சிக்கு  காப்பீட்டு கழக கோவை உட்கோட்ட தலைவர் பி.வி.குமார்  தலைமை தாங்கினார். வங்கி ஊழியர்கள் சங்கத்தின் தென்மண்டல இணைச்செயலா ளர் மகேஷ்வரன், காப்பீட்டு கழக ஊழியர் கள் சங்கத்தின் கோவை கோட்ட பொதுச்செய லாளர் கே.துளசிதரன், தமிழ்நாடு தீண்டாமை  ஒழிப்பு முன்னணியின் மாவட்ட செயலாளர் ஆறுச்சாமி, பயிற்சி வகுப்பு ஆசிரியர்களில் ஒருவரான முத்துராமலிங்கம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் ஏராளமான மாணவர் கள் பங்கேற்றனர். இறுதியில் காப்பீட்டு கழக ஊழியர் சங்க கோவை கோட்ட துணைத் தலைவர் கஜேந்திரன் நன்றி கூறினார்.