districts

img

சிபிஎம், ததீஒமு-யின் தொடர் முயற்சிக்கு வெற்றி

கோவை, பிப்.14- வீட்டுமனை பட்டா பெற்றும் உரிய இடத்தில் குடியேற முடி யாமல் இருந்த 292 குடும்பங்க ளுக்கு, மார்க்சிஸ்ட் கட்சி, தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் தொடர் முயற்சியால் நீதி கிடைத்துள்ளது. கோவை மாவட்டம், இருகூர் பகுதியைச் சேர்ந்த ஆதி திராவிட மக்கள் சுமார் 292 பேருக்கு, கடந்த  2001 ஆம் ஆண்டு, ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. எனி னும் அவர்களுக்கான இடங்கள்  அளவீடு செய்து தரப்படவில்லை. இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு ஆதரவாகவும், அவர்க ளுக்கு நீதி கிடைக்கும் பொருட்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் ஏராளமான போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத், மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமையில், இந்நிலத்தில் குடியேறும் போராட்டம் உள்ளிட்ட வைகள் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜனின் தொடர் முயற்சியின் காரணமாக, புதனன்று இருகூர்  சமுதாயக் கூடத்திற்கு அனைத்து  பயனாளிகளும் வரவழைக்கப் பட்டு ஆவணங்கள் சரிபார்க்கப் பட்டது. கோவை மாவட்ட ஆதிதி ராவிடர் நல தாசில்தார் மாலதி உள்ளிட்ட அதிகாரிகள் அடங்கிய குழுவினர் ஆவணங்களை சரி பார்த்தனர். இந்நிகழ்வில், மார்க்சிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலாளர் சி.பத்ம நாபன், தீண்டாமை ஒழிப்பு முன்ன ணியின் மாவட்டத் தலைவர் யு.கே.சிவஞானம், மாவட்டப் பொரு ளாளர் மகேஸ்வரன், இருகூர் பேரூராட்சி சிபிஎம் 8 ஆவது வார்டு  உறுப்பினர் ஸ்டாலின் குமார், வழக்கறிஞர் ராமர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், வாலிபர் சங்க சூலூர் தாலுகா  பொருளார் குரு சாரதி, கிளைச்  செயலாளர் பிரகாஷ், டாஸ்மாக் ஊழியர் சங்க நிர்வாகி விஜயரா கவன், சுமைப்பணி தொழிலாளர் சங்கத் தலைவர் நாகராஜ் உள் ளிட்ட தலைவர்கள் களத்தில் நின்று, பயனாளர்களுக்கு உதவி னர்.  இதுகுறித்து யு.கே.சிவஞானம் கூறுகையில், தலித் மக்களுக்கு அளந்து கொடுத்த இடத்தில் பய னாளிகள் அவர்களுக்குரிய இடத் தில் குடியேறும் வரை எங்களது போராட்டம் தொய்வின்றி தொட ரும் என்றார்.