தருமபுரி, ஜூன் 15- பென்னாகரம் அருகே அரசுப்பள்ளி ஆசிரியர்கள் வீடு வீடாக சென்று மாணவர் சேர்க்கையில் ஈடுபட்டு வரு கின்றனர். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், ஒகே னக்கல் சுற்று வட்டாரத்தில் இரண்டு துவக்கப்பள்ளி களும், ஊட்டமலை பகுதி யில் ஒரு அரசு மேல்நிலைப் பள்ளியும் செயல்பட்டு வரு கின்றன. இந்த ஆண்டு 12 ஆம் வகுப்பு தேர்வில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர். இந்நிலையில், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகப் படுத்த வேண்டும் என்று ஒகேனக்கல், ஊட்டமலை பகுதியில் அமைந்துள்ள அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் ஆகி யோர் செயல்பட்டு வருகின்றனர். அதன்ஒரு பகுதியாக ஊட்டமலை, ராணிப்பேட்டை, சத்திரம் ஆகிய கிராமங்களில் வசிக்கும் பெற் றோர்களிடம் வீடு, வீடாக சென்று அரசுப் பள்ளியின் சேர்க்கை குறித்தும், பாடத்திட் டங்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத் தினர். அப்போது விழிப்புணர்வு ஏற்படுத்தும் இடத்திலேயே மாணவர் சேர்க்கையும் நடை பெற்றது. இந்நிகழ்வால் அப்பகுதி மக்கள், தனி யார் பள்ளியைவிட அரசுப்பள்ளி சிறப்பாக செயல்பட்டு வருவது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தனர்.