districts

img

இருசக்கர வாகனங்களை சேதப்படுத்தும் நாய்கள்

தருமபுரி, ஜன.1- தருமபுரி நகராட்சியில் இருசக்கர வாகனங்களை நாய்ககள் சேதப்படுத்தி வருவதாக பொதுமக்கள் தெரிவித்துள் ளனர். தருமபுரி நகராட்சியில் 33 வார்டு கள் உள்ளன. இதில் அனைத்து வார்டு களிலும் தெருநாய்கள் அதிகளவில் உள் ளன. குழந்தைகள், பெண்கள் பொது மக்கள், இருசக்கர வாகனங்களில் செல் வோர் என அனைவரையும் அச்சுறுத் தும் வகையில் கடிப்பது போல துரத்து கின்றன. இதன்காரணமாக பொதுமக் கள், பெண்கள் குழந்தைகள் என அனை வரும் அச்சத்துடன் நடந்து செல்லும் சூழல் நிலவுகிறது. மேலும், வீட்டின் வெளியே நிறுத்தப்படும் இருசக்கர  வாகனங்களின் சீட்டுகளை சேதம் செய் கின்றன. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், குழந்தைகளை அழைத் துச்செல்லும்போதும், குழந்தைகள்,  பெண்கள் தனியே செல்லும்போதும் அச் சுறுத்தும் வகையில் நாய்கள் துரத்து கிறது. மேலும், வீ்ட்டின் வெளியே வாக னங்களை நிறுத்தினால் சீட்டுகளை கடித்து சேதப்படுத்துகிறது. அதேபோல  இரவு நேரங்களில் நாய்கள் குரைத்துக் கொண்டும், சண்டையிட்டு ஊளையிடு வதால் தூங்க முடியவில்லை. எனவே, நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த தருமபுரி நகராட்சி நிர்வாகம் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என வலியு றுத்தினர்.