districts

img

கோவையில் நாய் மற்றும் பூனை கண்காட்சி

கோவை, ஜூன் 2- கோவையில் 18 ஆவது அகில இந்திய நாய் கன்காட்சி மற்றும் சர்வதேச அளவி லான 2 ஆவது பூனை கண்காட்சி நடைபெற உள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டுள் ளது. இதுகுறித்து கோவை உக்கடம் வின் சென்ட் சாலையில் உள்ள அரங்கத்தில் ஆனைமலைஸ் கெனல் க்ளப் அமைப்பின் தலைவர் வி.எஸ்.ரவி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், இந்த ஆண்டு தங்களுடன், கோவை மாவட்ட கேட்டரி க்ளப் இனைந்து, வரும்  ஜூன் 5 ஆம் தேதியன்று நவ இந்தியா பகுதி யில் உள்ள இந்துஸ்தான் கல்லூரியில், மாபெரும் நாய், மற்றும் பூனை கண்காட்சி  நடைபெற்ற உள்ளது, இந்த கன்காட்சியா னது, 18 ஆவது, ஆல் பீட் சேம்பியன் போட்டி யாக நடத்தப்பட உள்ளது. இதில் 35 வகை களில், நாய்கள் கலந்து கொள்ள இருப்ப தாகவும் இவற்றின் திறமைகளை கன்டறிய, நடுவர்களாக ஒருவர் பஞ்சாப் மாநிலத்தில் இருந்தும், ஒருவர் குஜராத் மாநிலத்தில் இருந்தும் வர உள்ளதாக தெரவித்தார். அதேபோன்று, கோவை கேட்டரி க்ளப்  சார்பாக நடைபெறும் இரண்டாவது ஆண்டு  பூனை கன்காட்சியும் நடைபெற உள்ளது. இதில் நடுவர்களாக மூவர் கலந்து கொள்ள இருப்பதாக தெரவித்தார். இந்த கன்காட்சி யில் கலந்து கொள்ள 10 வகைகளில் 150 பூனைகள் வந்துள்ளது. மேலும், இந்தியா வில் நடைபெறும் இதுபோன்ற கண்காட்சி களில் பொதுமக்களின் வளர்ப்பு பிராணி களை அனுமதிக்க மாட்டார்கள். ஆனால், இங்கு அனுமதிக்கப்படும், என்றார். மேலும், சிறப்பாக கோவை மாவட்ட  காவல்துறையின் சார்பாக, காவல்பணிக ளில் ஈடுபடும் நாய்களின் சாகச அனிவகுப்பு களும் நடைபெற உள்ளது என வி.எஸ்.ரவி  தெரிவித்தார்.