சேலம், ஜூலை 02- சேலம் மேட்டூரில் 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி காலவரையற்ற உண் ணாவிரதமிருந்த மருத்துவர்களை அரசு வலுகட்டாயமாக அப்புறப்ப டுத்தி உள்ளது. மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை கூட நடத் தாமல் வலுக்கட்டாயமாக மருத்து வர்களை கைது செய்த காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகத் தின் நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்டக்குழு கண்டித்துள்ளது. அரசு மருத்துவர்களுக்குத் தகுதிக்கேற்ற ஊதியம் தர தமிழ் நாடு அரசு 2009 ஆம் ஆண்டு அரசாணை எண் 354 வெளியிட்டது. இதனை கடந்த அதிமுக அரசு பத்தாண்டுகளாகியும் முழுமை யாக நிறைவேற்றாமல் கிடப்பில் போட்டது. மருத்துவர்களின் பல் வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி அரசு மருத்துவர்கள் பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகின் றனர். இதன்தொடர்ச்சியாக கடந்த ஜூன் 29 முதல் 9 அம்ச கோரிக்கை களை முன்வைத்து அரசு மருத்து வர்கள் நளினி, பெருமாள்பிள்ளை மற்றும் கொரோனா பணியில் இறந்த அரசு மருத்துவர் விவேகா னந்தன் மனைவி திவ்யா ஆகிய மூவரும், சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம்,மேச்சேரி ஒன்றியம், விரு தாசம்பட்டி ஊராட்சி, மல்லப்பனூர் பிரிவு பகுதியில் மறைந்த அரசு மருத்துவர் லட்சுமி நரசிம்மன் தோட்டம் கல்லறையில் காலவரை யற்ற உண்ணா விரத போராட் டத்தை துவக்கினர்.
இவர்களுக்கு மார்க்சிஸ்ட் கட்சி யின் சேலம் மாவட்டக்குழு செயலா ளர் மேவை. சண்முகராஜா உள் ளிட்ட அரசியல் கட்சி மற்றும் ஜனநா யக அமைப்புகள் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர். முன்னதாக அரசு மருத்துவர்களின் உண்ணாவி ரத போராட்டத்த தகவலை அறிந்த வுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் மாநில செயலாளர் கே.பால கிருஷ்ணன் மருத்துவத்துறை அமைச்சருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கோரிக்கை களை பரிசீலித்து போராட்டத்தை சுமூக தீர்வுக்கு கொண்டுவர வேண் டுகோள் விடுத்தார். இதனை தொடர்ந்த சேலம் மாவட்ட ஆட்சியர் சார்பாக அரசு மோகன் குமாரமங்கலம் மருத்து வக் கல்லூரி மருத்துவமனை முதல் வர், மேட்டூர் வட்டாச்சியர், ஓமலூர் காவல் துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட வருவாய்துறை மற்றும் மருத்துவதுறை, காவல்துறை உயர் அலுவலர்கள் நேரில் வந்து, கோரிக்கைகளை அரசின் கவனத் திற்கு உரியமுறையில் கொண்டு செல்லப்படும் என உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்டவர்களு டன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடு பட்டனர். இந்நிலையில், ஜூலை 2 ஆம் தேதி காலை 6 மணி அளவில் மேட் டூர் வட்டாச்சியர், ஓமலூர் காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் அரசு அலுவலர்கள் உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்ட மருத்து வர்களை வலுக்கட்டாயமாக ஆம்பு லன்ஸ்சில் ஏற்றி, கைது செய்து அப் புறப்படுத்தினர்.
அரசின் இந்த நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்டக்குழு கண்டித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாவட்ட செயலாளர் மேவை.சண்முகராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து நிறைவேற்றிட உரிய நடவடிக்கைகளை எடுக்காமல், தடாலடியாக அப்புறப்படுத்தி, கைது செய்வது என்பது ஜனநாய கத்தில் ஏற்புடையதல்ல, இது கண் டிக்கத்தக்கது. இது பிரச்சனையை தீர்க்கும் பாதையுமல்ல. இதை யாரும் ஏற்க முடியாது. எனவே, ஏழை எளிய மக்களைக் காக்கும் அரசு மருத்துவர்களை விடுதலை செய்வதோடு, கோரிக்கைகளை அரசு பரிவுடன் பரிசீலித்து நிறை வேற்றிட வேண்டும், இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் கூறுகை யில், தமிழக அரசு இதுவரை குறைந் தபட்ச பேச்சுவார்த்தை கூட அழைக் கவில்லை என்பது மிகுந்த மனவ ருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. தமி ழக முதல்வர் மட்டும் சுகாதாரத் துறை அமைச்சர் மீது உள்ள நம்பிக் கையின் மீதும், சகமருத்துவர்கள் வேண்டுகோளை ஏற்று சாகும் வரை உண்ணாவிரத போராட் டத்தை தற்காலிகமாக கைவிடுவ தாக தெரிவித்துள்ளனர். இருப்பி னும் மருத்துவர்கள் கோரிக்கை களை முதல்வர் நிறைவேற்ற வேண் டும் என்று வேண்டுகோள் விடுத் துள்ளனர். குறிப்பிட்ட காலத்தில் தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மீண்டும் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று எச் சரித்தனர்.