கோவை, ஜூன் 27- மேம்பால கட்டுமான பணிக ளுக்க நெடுஞ்சாலையோரம் உள்ள குடியிருப்புகளை அகற்றுவ தற்கு முன்பு மாற்று இடம் வழங்க வேண்டும் என பெரியநாயக்கன்பா ளைய பகுதி மக்கள் மாவட்ட ஆட்சி யரிடம் கோரிக்கை மனு அளித்த னர். இதுகுறித்து அம்மனுவில் தெரிவித்திருப்பதாவது, கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளை யம் பகுதிக்குட்பட்ட 10 ஆவது வார் டில் ஆக்கிரமிப்பு நிலத்தை தேசிய நெடுஞ்சாலை துறையினர் அகற் றும் பணியில் ஈடுபட்டு வருகின்ற னர். சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு குடியிருந்து வரு கிறோம். அனைவரும் தினக்கூலி வேலைக்கு சென்று வாழ்க்கை நடத் தும் அன்றாடம் காய்ச்சிகள். எங்க ளது வீடுகளுக்கு அரசின் மூலம் மின் இணைப்பு, சொத்துவரி, தண்ணீர் வரி முறையாக பெற்றுள்ளோம். அதற்கான வரி மற்றும் கட்டணங் களை இன்றுவரை செலுத்தியுள் ளோம். இந்நிலையில், பெரியநா யக்கன்பாளையம் எல்எம்டபுள்யு பகுதியில் மேம்பால பணி நடை பெற்று வருகிறது. அதற்கான சாலை விரிவாக்கத்திற்கு ஏற்க னவே 60 அடி அகலத்திற்கு அள வீடு செய்து, நிலத்தை எடுத்து கொண்டனர். குறிப்பிட்ட இடத்திலி ருந்து மின் கம்பங்கள் நடப்பட்டு உள் ளன. அதனை தள்ளிதான் எங்க ளது குடியிருப்புகள் உள்ளன. நாங் கள் தற்சமயம் எவ்வித ஆக்கிரமிப்பு களும் செய்யாமல் குடியிருந்து வரு கிறோம். மேலும், எங்களை திடீ ரென 7 நாட்களுக்குள் வீட்டை காலி செய்ய சொல்லி நெடுஞ்சாலை துறையினர் எங்களது வீடுக ளில் நோட்டீஸ் கொடுத்துள்ளனர். இப்போது காலி செய்யச்சொன் னால் எங்களது உடமைகளை வைக்க கூட இடம் கிடையாது. எந்த வழியுமின்றி, வருமானமின்றி தவித்து வருகிறோம். மேற்படி வாழ் வாதாரமின்றி தவிக்கும் எங்களுக்கு மாற்று இடம் தரும்வரை மேற்படி வீடுகளை காலி செய்யாமல் மாற்று இடம் தந்து அருகாமையிலேயே ஏதாவது ஒரு இடமும், பட்டாவும் வழங்கிட வேண்டும். அதுவரை எங்களுக்கு உரிய கால அவகாசம் வழங்க வேண்டும் என அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.