உதகை, ஜூன் 2- துப்புரவு பணியில் அவுட்சோர் சிங் முறையை புகுத்த கூடாது உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உதகை மண்டல அலுவலகம் முன்பு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பொதுத்தொழிலாளர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தமிழக அரசு பொது விநியோ கத்தை பலப்படுத்தி பருவகால பணி யாளர்களை உடனே நிரந்தரம் செய்ய வேண்டும். கொள்முதல் பணியில் உள்ள குளறுபடிகளை களைய வேண்டும். நவீன அரிசி ஆலையை தனியாருக்கு தாரை வார்க்க கூடாது. சுமை பணி மற்றும் துப்புரவு பணியில் அவுட்சோர்சிங் முறையை புகுத்த கூடாது உள் ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக பொதுத்தொழிலா ளர் சங்கம் சார்பில் மாநிலம் முழுவ தும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதன் ஒரு பகுதியாக வியாழ னன்று உதகை மண்டல அலுவல கம் முன்பு நடைபெற்ற கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு கோவை மண்டல செயலாளர் வி.தேவகுமார் தலைமை வகித்தார். மாநில பொருளாளர் ஏழுமலை, டி.என்.சி.எஸ்.இ. பொது செயலாளர் ரமேஷ், போக்குவரத்து செயலா ளர் கணேஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு தொழிற்சங்கங்களின் நிர் வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.