districts

img

கோவில் நிலத்தில் சாகுபடி செய்யும் விவசாயிகளை வெளியேற்றாதே!

பொள்ளாச்சி, அக்.16- நீண்ட காலமாக சாகுபடி செய்யும் மற் றும் இனாம் நிலப்பட்டா பெற்றவர்கள் கோவில் இடங்களில் குடியிருக்கும் விவசா யிகளை வெளியேற்றும் நடவடிக்கையை கைவிடக்கோரி பொள்ளாச்சியில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. கோவில் நிலங்களில் பல ஆண்டுகளாக குத்தகை சாகுபடி செய்யும் ஏழை விவசாயி களை மறு ஏலம் என்ற பெயரில் நிலத்தை விட்டு வெளியேற்றுவதை கைவிட வேண் டும். 200 ஆண்டு காலமாக அனுபவத்தில் உள்ள கூளநாயக்கன்பட்டி கிராம கம்பளத்து நாயக்கர் குலதெய்வக் கோவில்களையும் நிலங்களையும் அவர்களுக்கே சொந்த மாக்கிடவும், விவசாயம் செய்து வருபவர்க ளுக்கு வருவாய் இடங்களை வழங்கிட வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அடிமனை பயனாளிகள் - குத் தகை வியபாரிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் நடைபெற்ற இயக்கம், கூளநாயக்கன் பட்டியில் நடைபெற்றது. தமிழ்நாடு அடி மனை பயனாளிகள் - குத்தகை வியாபாரி கள் பாதுகாப்பு சங்க தலைவர் எம்.குண சேகர் தலைமை ஏற்றார். இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் எஸ்.ஆர்.மதுசூ தனன், மாவட்டச் செயலாளர் வி.ஆர்.பழனிச் சாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில்,  மாவட்ட துணைத்தலைவர் கே.மகாலிங்கம் மற்றும் தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் பி.ஸ்டாலின் பழ னிச்சாமி, தலைவர் தென்னை சார் தொழில் கூட்டமைப்பு தலைவர் வி.பாலகுருசாமி உள் ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். முடிவில், கே.காளியம்மாள் நன்றி கூறினார்.