தருமபுரி, மார்ச் 31- திமுக வேட்பாளர் ஆ.மணி-க்கு வாக்கு கேட்டு, திமுகவினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடு பட்டு வருகின்றனர். தருமபுரி மக்களவை தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆ.மணியை ஆதரித்து, தருமபுரி உழவர் சந்தையில் திமுகவி னர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இந்நி கழ்ச்சிக்கு திமுக கிழக்கு மாவட்டச் செயலா ளர் தடங்கம் பெ.சுப்பிரமணி தலைமை வகித் தார். இதில் திமுக தொழில்நுட்ப அணி மாநில துணைச்செயலாளர் தருண், நகரச் செயலாளர் நாட்டான் மாது, அவைத்தலை வர் அழகுவேல், பொருளாளர் சம்மந்தம் தொழில்நுட்ப அணி மாவட்ட அமைப்பாளர் கெளதம், சுற்றுச்சுழல் அணி சங்கர், மாண வரணி பெரியண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். அப்போது, தருமபுரி மாவட்டத்தை பொருளாதார ரீதியாக வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்லவும், விவசாயிகளின் விலை பொருட்களுக்கு கட் டுப்படியான விலை நிர்ணயம், கேஸ், டீசல், பெட்ரோல் விலையை குறைக்க உதயசூ ரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.