கோவை, ஏப்.16- ஜனநாயகத்துக்கான பொது மக்கள் மேடை சார்பில் கோவை யில் தேர்தல் கள ஆய்வு மேற் கொண்டது. இதில், இந்தியா கூட்டணியின் திமுக வேட்பாளர் கணபதி பா.ராஜ்குமார் வெற்றி பெறுவது உறுதி எனவும், பாஜக வின் அண்ணாமலை மூன்றாவது இடத்திற்கு தள்ளப்படுவார் என அக்கருத்துக்கணிப்பில் தெரிவிக் கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவ்வமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வு அறிக் கையில் தெரிவித்துள்ளதாவது, வாக்குரிமை இந்திய மக்களின் உச்சபட்ச அதிகாரம். ஜனநாய கத்தைக் காக்கும் மகத்தான உரிமை போலவே கடமை. அத்த கைய வாக்கை தவறாமல் செலுத்தி 100 சதவிகித வாக்குப் பதிவை சாத்தியப்படுத்த வேண்டும் என்பது எங்களின் தலையாய நோக்கம். மக்களவைத் தேர்தல் 2024 தமிழகத்தில் ஏப்ரல் 19 -ம் தேதி நடைபெறுகின்றது. இதற்கி டையே தமிழக அளவில் முக்கிய தொகுதியாகப் பார்க்கப்படும் கோவை தொகுதியில் ஜனநாய கத்துக்கான பொதுமக்கள் மேடை அமைப்பு மாபெரும் கருத் துக்கணிப்பை நடத்தியது. கோவை தொகுதியைப் பொறுத் தவரை, ‘இந்தியா’ கூட்டணி வேட் பாளராக திமுக சார்பில் கணபதி ராஜ்குமார் போட்டியிடுகின்றார்.
அதே போல, அதிமுக வேட்பா ளர் சிங்கை ஜி. ராமச்சந்திரன், பாஜக சார்பில் அண்ணாமலை மற்றும் நாம் தமிழர் கட்சி யின் சார்பில் கலாமணி ஜெகநா தன் உட்பட மொத்தம் 37 வேட்பா ளர்கள் போட்டியிடுகின்றனர். கோவையை உள்ளடக்கிய 6 சட்ட மன்றத் தொகுதிகளான சூலுார், கவுண்டம்பாளையம், கோயமுத் துார் தெற்கு, கோயமுத்துார் வடக்கு, பல்லடம், சிங்காநல் லுார் ஆகிய இடங்களில் சர்வே நடத்தியது. இதில், ஆண்கள், பெண்கள், திருநங்கைகள் என மொத்தம் தொகுதிக்கு 400 நபர்கள் வீதம், மொத்தம் 2,400 நபர்களிடம் சர்வே எடுக்கப்பட்டது. அந்த முடிவுகளின் படி, திமுக கூட்டணி 47.76%, அதிமுக கூட் டணி -22.41%, பாஜக கூட்டணி- 19.12%, நாம் தமிழர் -09, 23%, நோட்டா - 1.48% வாக்குகளைப் பெறும். தொகுதி மக்கள் கருத்து கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரை அதிக அளவில் தொழிற்சாலைகள் இருக்கின் றன. தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்கள், சிறு, குறு தொழிலதிபர்கள், நெசவா ளர்கள், விவசாயிகள் எனப் பலதரப்பட்ட தொழில்களை நம்பி இங்குள்ள மக்கள் வாழ்ந்து வரு கின்றனர். இந்தியாவின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றாக வும் திகழ்ந்து வருகிறது கோவை. மக்களைச் சந்தித்ததில் அரசியல் கட்சிகளின் செயல்பாடு குறித் தும், தங்களின் எதிர்பார்ப்பு குறித் தும் அவர்கள் பகிர்ந்துகொண்ட தகவல்கள் இதோ! தி.மு.க, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மக்கள் நீதி மய்யம் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி என அசுர பலமான கூட்டணியாக இருக்கிறது
இந்தியா கூட்டணி ஒவ்வொரு கட்சிகளுக்குமான வாக்கு வங்கிகள் வாக்குப்பதிவில் பெரும் ஆதிக்கம் செலுத்தும். திமுக வேட்பாளர் இந்தியா கூட்டணியின் வேட் பாளரான தி.மு.க சார்பில் போட்டி யிடும் கணபதி பி.ராஜ்குமார் மூன்று முறை மாமன்ற உறுப் பினராகவும், ஒரு முறை மேயரா கவும் இருந்திருக்கிறார். களத் தில் உள்ள போட்டியாளர்க ளிலேயே அரசியல் அனுபவம் அதிகமுள்ள வேட்பாளர் இவர் தான். நீண்ட அரசியல் பயணம் இருந்தாலும் பெரிய அளவில் குற்றச்சாட்டுகளோ, சர்ச்சைக ளிலோ அடிபடாதவராக இருக்கி றார். அது அவருக்கு பலமாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், இளைஞர்கள் இவரை அடையா ளப்படுத்திக் கொள்வதிலும் சிக்கல் இருக்கிறது. அதைப் போக்க தொடர்ச்சியாக மக்க ளைச் சந்தித்து வருகிறார். அதிமுக வேட்பாளர் அ.தி.மு.க வின் சார்பில் போட் டியிடும் சிங்கை ஜி.ராமச்சந்திரன் சமூக வலைதளங்களில் பரபரப் பாகப் பேசப்பட்டாலும், அதிமுக வுக்கு கணிசமான வாக்கு வங்கி இருந்தாலும், ஒன்றியத்தில் யார்? கூட்டணியில் இருக்கிறார் கள் என்று தெளிவுப்படுத்தப்படா ததால், மக்கள் அதிமுகவுக்கு வாக்களிக்கமாட்டோம் என்கிறார் கள். அதிமுக கூட்டணியில் எஸ்டி பிஐ இருந்தாலும், நாங்கள் சந் தித்த இஸ்லாமியர்கள் அனைவ ரும் திமுக கூட்டணிக்கே ஆத ரவு தெரிவித்தனர். பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு இளை ஞர்கள் மத்தியில் ஆதரவு இருந் தாலும், கட்சியாக பாஜக மீது கடும் அதிருப்தியில் இளைஞர் கள் இருக்கிறார்கள். குறிப்பாக ஜிஎஸ்டியால் சிறு, குறு தொழில் கள் முடக்கப்பட்டதும். அதனால் ஏற்பட்ட வேலைவாய்ப்பு இன் மையும், அண்ணாமலைக்கு எதி ரான வாக்குகளாக மாறுகின்றன. ஜிஎஸ்டி பெரும் தாக்கம் செலுத் தும். இது பாஜகவுக்கு பின்னடை வாக இருக்கிறது. நேரடியாக தொழில்கள் பாதிக்கப்பட்டதால் மக்கள் இன்னும் பணமதிப்பி ழப்பை மறக்கவில்லை. பத் தாண்டு கால பா.ஜ.க ஆட்சியில் கோயம்புத்தூரின் தொழில்வளம் பெரும்பான்மையாகச் சரிந்துள் ளது. இது தேர்தலில் எதிரொலிக் கும்.
நாதக வேட்பாளர் குறிப்பிட்ட சதவிகித இளை ஞர்களுக்கு நாம் தமிழர் கட்சி யின் மத்தியில் அபிமானம் இருக் கிறது. மொத்த நிலவரம் தொகுதியின் மொத்த நில வரத்தைப் பார்க்கிறபோது, பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி, பெ ட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்டவற்றால் ஏற்பட்ட பாதிப் பிலிருந்து மக்கள் இன்னும் மீண்டு வரவில்லை. அது அவர் களின் வாழ்க்கையை வெகுவாக பாதித்திருக்கிறது. மேலும், சென்னை, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களுக்குச் செல்லும் ரயில் களின் எண்ணிக்கையை அதிகப் படுத்தும் கோரிக்கையும் கிடப் பில் போடப்பட்டிருப்பதும், இருக்கும் பெங்களூர் ரயிலை பாலக்காடு வரையில் எடுத்துச் செல்லும் முயற்சிகள் உள்ளிட் டவை மக்களை வேதனையடைச் செய்திருக்கிறது. ஜி.எஸ்.டி –யால் ஏற்பட்ட தொழில் முடக் கம் இந்தத் தேர்தலின் முக்கிய தீர்மான சக்தியாக இருக்கிறது. மோடி அரசின் மீது பெரும் பான்மை மக்கள் வைக்கக்கூடிய விமர்சனங்கள் முக்கிய காரணி யாக பார்க்கப்படுகிறது.குறிப் பாக மணிப்பூர் கலவரமும், கண் டுகொள்ளப்படாத விவசாயிக ளின் போராட்டமும் கோவை மக்க ளிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் வெள்ள சேதங்களை பார்வை யிடாத பிரதமர், தேர்தல் பரப்பு ரைக்காக மட்டுமே அடிக்கடி தமிழ்நாடு வந்து போனதை தேர்தலுக்கான ஸ்டண்ட் என்றே மக்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.