கோவை, ஏப்.1- பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர் கள் வாக்குசேகரிக்க வரும்போது, கடந்த 10 ஆண்டுகளில் மோடி என்ன செய்தார் என்கிற கேள்வியை பொதுமக்கள் எழுப்ப வேண்டும் என கோவை திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் கேட்டுக்கொண்டார். இந்தியா கூட்டணியின் கோவை நாடா ளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் திங்களன்று காலை மணியகாரம் பாளையம் பகுதி கழகத்திற்கு உட்பட்ட காந்தி மாநகரில் பிரச்சாரத்தை துவக்கினார். வீதி வீதியாக சென்று வாக்குகளை சேகரித்த வேட்பாளர் கணபதி ராஜ்குமார், அப்பகுதி யில் தூய்மைப் பணியாளர்களிடமும் வாக்கு சேகரித்தார். அப்போது, கலைஞர் உரிமைத் தொகை மாதம் ரூ. 1000 வங்கி கணக்கில் வருவதாகவும், இலவச பேருந்து பயணத் தால், பேருந்து கட்டணம் சேமிப்பாவதாகவும் தூய்மைப் பணியாளர்கள் தெரிவித்தனர். மேலும், எங்கள் ஓட்டு உதயசூரியனுக்கு தான் என வேட்பாளரிடம் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து பிரச்சாரம் மேற் கொண்ட வேட்பாளர் கணபதி ராஜ்குமார் பேசுகையில்;- நாங்கள் திமுக, செய்த சாத னைகளை சொல்லி ஓட்டு கேட்டுக் கொண்டி ருக்கிறோம். பல இடர்பாடுகளுக்கு நடுவே நிதி நெருக்கடியின் நடுவே, பல சிறந்த திட்டங்களை மகளிருக்கும், பொதுமக்க ளுக்கும் தொடர்ந்து கொடுக்கக்கூடிய சிறந்த அரசாக திமுக உள்ளது. அதனால் தான், இன்றைக்கு இந்தியாவிலேயே சிறந்த மாநி லமாக, ஒரு எடுத்துக்காட்டு மாநிலமாக இன் றைக்கு தமிழ்நாடு விளங்கிக் கொண்டிருக்கி றது. கடந்த 10 ஆண்டுகளாக இங்கே ஆட்சி செய்து கொண்டிருந்த பாஜக நமக்கு என்ன செய்து கொடுத்தது? என்றால், விலை ஏற் றத்தை தவிர வேறு எதுவும் இல்லை. ஒவ் வொருத்தரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் அளிப்பேன் என்று பிரதம மந்திரி வாக்குறுதி கொடுத்தார். அது என்ன ஆயிற்று என்று நீங்கள் கேட்க வேண்டும். ஜிஎஸ்டி பிரச்ச னைகளை எல்லாம் எடுத்துச் சொல்ல நாடா ளுமன்றத்தில் இந்த தொகுதியின் குரல் ஓங்கி ஒலிக்க உதயசூரியன் சின்னத்திற்கு பெருவாரியான ஆதரவை கொடுக்க வேண்டும் என்றார். இந்த பிரச்சாரத்தின்போது, கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக், மேயர் கல்பனா ஆனந்தகு மார், மதிமுக மாவட்டச் செயலாளர் கணபதி செல்வராஜ், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.ஆர்.முருகேசன், வடக்கு நகரக்குழு செயலாளர் சுந்தரம் மற்றும் காங்கிரஸ், சிபிஐ, விடுதலை சிறுத்தைகள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தனபால், திராவிட தமிழர் கட்சி வழக்கறி ஞர் வெண்மணி உள்ளிட்ட திரளானோர் பங் கேற்றனர்.