districts

img

அரூரில் திமுக வேட்பாளர் வாக்குச் சேகரிப்பு

தருமபுரி, ஏப்.1- தருமபுரி மக்களவை தொகுதியில் போட் டியிடும் திமுக வேட்பாளர் ஆ.மணி, அரூர்  சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு கிரா மங்களில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். தருமபுரி மக்களவை தொகுதியில் இந் தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாள ராக ஆ.மணி போட்டியிடுகிறார். இவரை ஆத ரித்து திமுக தருமபுரி மேற்கு மாவட்டச் செய லாளரும், முன்னாள் அமைச்சருமான பி.பழ னியப்பன் தலைமையில், வேட்பாளர் ஆ. மணியை ஆதரித்து திமுகவினர் வாக்குசேக ரிப்பில் ஈடுபட்டனர். அப்போது பி.பழனியப் பன் பேசுகையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் நல் லாட்சியில் அனைத்துத்தரப்பு மக்களுக் கும் அரசு நலத்திட்ட உதவிகள் கிடைக்கின் றன. மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 உரி மைத்தொகை, அரசுப் பேருந்துகளில் கட்ட ணமில்லாப் பயணம், பள்ளி, கல்லூரி மாணவ,  மாணவிகளுக்கு எண்ணற்ற அரசு நலத்திட் டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. எனவே, இந்தியா கூட்டணி சார்பில் தருமபுரி மக்க ளவை தொகையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆ.மணியை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண் டும், என்றார். அரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரி யப்பட்டி, சிக்களூர், நரிப்பள்ளி, கோட்டப் பட்டி, சிட்லிங், வேலனூர், ஏ.கே.தண்டா, பையர்நாயக்கன்பட்டி, மொண்டுகுழி, ஆண் டியூர், டி.அம்மாபேட்டை, தீர்த்தமலை, ஈட்டி யம்பட்டி, எல்லப்புடையாம்பட்டி, சித்தேரி, அச்சல்வாடி உள்ளிட்ட 45க்கும் மேற்பட்ட கிரா மங்களில் திமுக வேட்பாளர் ஆ.மணி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதில் கூட்டணி கட்சி களின் தலைவர்கள் கலந்து கொண்டனர். கடத்தூரில் வாக்குசேகரிப்பு இதைத்தொடர்ந்து தருமபுரி ஒன்றியத் திற்குட்பட்ட பகுதியில் திமுக தருமபுரி கிழக்கு மாவட்டச் செயலாளர் தடங்கம் பெ. சுப்ரமணி தலைமையில், ஒன்றியச் செய லாளர் கே.எஸ்.ஆர்.சேட்டு ஏற்பாட்டில் தகவல் தொழில் நுட்ப அணி மாநில துணை  செயலாளர் ஏ.கே.தருண் முன்னிலையில் வாக்குசேகரித்தனர். இதில் விசிக மாவட் டச் செயலாளர் த.கு.பாண்டியன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் தரமசெல் வன், இலக்கியம்பட்டி ஊராட்சி மன்றத் தலை வர் சுதாரமேஷ், அவைத்தலைவர் செல்வ ராஜ், பொருளாளர் தண்டபாணி, மாண வரணி கௌதம் உட்பட பலர் கலந்து கொண் டனர். தருமபுரி ஒன்றியத்திற்குட்பட்ட இலக்கி யம்பட்டியில் துவங்கிய பிரச்சாரம் நியூ  காலனி, பிடமனேரி, கடத்தூர், அதகப்பாடி, பண்டஅள்ளி, பங்குநந்தம், நாகர்கூடல், இண்டூர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட இடங் களில் பிரச்சாரம் நடைபெற்றது. நல்லம் பள்ளி மேற்கு ஒன்றிய வைகுந்தம், மாணவ ரணி அமைப்பாளர் என்.பி.பெரியண்ணன், கிளை நிர்வாகிகள் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.