உடுமலை, ஏப்.12- போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் உடு மலையில் புறவழிச்சாலைகள் அமைக்கப்படும் என பொள் ளாச்சி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் கே. ஈஸ்வசாமி வாக் குறுதி அளித்தார். இந்தியா கூட்டணியின் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி வேட்பாளர் கே.ஈஸ்வரசாமி உடுமலை நகராட் சிக்குட்பட்ட யூனியன் ஆபிஸ், காந்திசவுக், ராமசாமி நகர், பேருந்துநிலையம், வெஞ்சமடை மற்றும் அண்ணாகுடி யிருப்பு பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது வாக்காளர்களிடம் பேசிய அவர், நூறு ஆண்டு பழமையான உடுமலை நகராட்சியின் பெருமை களை அனைவருக்கும் தெரியும் வகையில், பழைய நகர் மன்ற கட்டிடத்தில் சிறப்பு அரங்கம் அமைக்கப்படும். போக்கு வரத்து நெரிசலை குறைக்கும் வகையில் உடுமலையில் புறவழி சாலைகள் அமைக்கப்படும் வார சந்தை தரம் உயர்த் தப்படும். புதிய போக்குவத்து நிலையம் விரைவில் பயன் ்பாட்டிற்கு வர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்தார். இப்பிரச்சாரத்தின் போது, திமுக உடுமலை நகரச் செயலாளர் வேலுசாமி, மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர் எஸ்.ஆர்.மதுசூதனன், நகரச் செயலாளர் தண்டபாணி, காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் தென்னரசு, நகரத் தலைவர் ரவி, உடுமலை நகர்மன்றத் தலை வர் மத்தீன், திமுக தேர்தல் பொறுப்பாளர் தமிழ்மறை, தாரா புரம் தனசேகர், மதிமுக ராம்தாஸ் மற்றும் இந்திய கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் உள்ளிட்ட திரளானோர் உடனி ருந்தனர். பொள்ளாச்சி பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, வடக்கு ஒன்றியத்தில் நாதேகவுண்டன்புதூர், திம்மங்குத்து, நாகூர், அண்ணாநகர் நடுப்புணி ஆகிய பகுதிகளில் வியாழனன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு, உதயசூரியன் சின்னத் திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது, வாக்காளர்களிடம் பேசிய அவர், பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் விதமாக, ஆனை மலையாறு, நல்லாறு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றி குடிநீர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என வாக்குறுதி அளித்தார். இப்பிரச்சாரத்தின் போது இந்தியா கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகி கள், தொண்டர்கள் என பலர் உடனிருந்தனர்.