இளம்பிள்ளை, பிப்.17- இடங்கணசாலை நகராட்சி 6 ஆவது வார்டில் திமுக வேட் பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். சேலம் மாவட்டம், இடங்கணசாலை நகராட்சி 6 ஆவது வார்டில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டி யிடும் திமுக வேட்பாளர் பெ. மகேந்திரன் வீடு, வீடாக சென்று இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப் போது, குடிநீர், சுகாதாரம், சாலை வசதிகளை மேம்படுத்திட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்காளர்களிடம் உறுதியளித்தார். முன்னதாக, இந்த வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தின்போது ஏராளமான பெண்கள் வேட்பாளர் பெ.மகேந்திரனுக்கு ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். உடன், சிபிஎம் கட்சியின் சார்பில் முனியப்பன், ரவிக்குமார், அறிவழ கன் உள்பட கூட்டணி கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.