districts

img

ரூ.600 கோடியில் சில்வர் பார்க் டி.எம்.செல்வகணபதி வாக்குறுதி

சேலம், மார்ச் 24- சேலத்தில் ரூ.600 கோடி மதிப் பீட்டில் சில்வர் பார்க் அமைக்கப்ப டும் என சேலம் மக்களவை தொகுதி  திமுக வேட்பாளர் டி.எம்.செல்வக ணபதி வாக்குறுதி அளித்துள்ளார். சேலம் மக்களவை தொகுதியில்,  இந்தியா கூட்டணியின் திமுக வேட் பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.எம்.செல்வகணபதி, கன்னங்கு றிச்சி பகுதியில் தேர்தல் பிரச்சா ரத்தை தொடங்கினார். அப்போது  அவர் பேசுகையில், பாஜக கூட்டணி யில் இப்போது இருப்பவர்கள் சந்தர் பவாதிகள். தமிழ்நாட்டு மக்களுக்கு  துரோகம் செய்த எடப்பாடி பழனி சாமி, அனைவரது முதுகிலும் குத்தி யுள்ளார். இறுதியாக, தன்னை முதல் வராக்கிய சசிகலாவையும் அவர்  விட்டு வைக்கவில்லை. துரோகத் தைப் பற்றி பேச எடப்பாடி பழனிசா மிக்கு தகுதியில்லை. தமிழக மக்க ளின் தேவையை அறிந்து முதல்வர்  மு.க.ஸ்டாலின் பல நல்ல திட்டங் களை செய்து வருகிறார். குறிப்பாக  பள்ளி மாணவ, மாணவிகளுக்கு எண்ணற்ற திட்டங்களை செய்து  வருகிறார். மகளிருக்கு மாதந்தோ றும் ரூ.1000 உரிமைத்தொகை, கட் டணிமில்லா பேருந்து பயணம், சுய  உதவிகுழுக்கள் கடன் செய்யப்பட் டுள்ளது. வெள்ளித்தொழிலுக்கு பெயர் போன சேலம் மாவட்டத்தில்  வெள்ளித்தொழிலை மேம்படுத்த அனைத்து பணிகளும் மேற்கொள் ளப்படும். சேலத்தில் மிகப்பெரிய சில்வர் பார்க் ரூ.600 கோடி மதிப் பீட்டில் அமைக்கப்படும், என்றார். மேலும், ஆதார் கார்டு, ரேசன்  கார்டு, வாகன ஓட்டுநர் உரிமம் ஆகி யவற்றை பெற ஒரு சட்டமன்ற தொகு திக்கு ஒரு மையம் உருவாக்கப்படும். ஸ்மார்ட் சிட்டியில் இன்றைக்கு பல்வேறு பணிகள் தலைவருடைய (மு.க.ஸ்டாலின்) ஆட்சிக்காலத்தில் நடைபெற்றிருக்கிறது. சேலம் மக்க ளவை தொகுதியில் வருடந்தோ றும் ஆயிரம் ஏழை, எளிய மக்களை  தத்தெடுத்து டிரஸ்ட் உருவாக்கப் பட்டு, அதன் மூலமாக ஆயிரம் குடும் பங்களுக்கு அனைத்து வசதிகளும்  செய்து தரப்படும். தமிழ்நாட்டில் மக்களுக்கான திட்டங்கள் தொடர  திமுக கூட்டணி வேட்பாளர்களை பெருவாரியான வாக்கு வித்தியா சத்தில் வெற்றி பெற செய்ய வேண் டும், என பொதுமக்களிடையே கேட் டுக்கொண்டார். இதனைத்தொடர்ந்து கோரி மேடு, சின்ன கொல்லப்பட்டி, பெரிய  கொல்லப்பட்டி, சின்ன திருப்பதி, ஜான்சன் பேட்டை மெயின் ரோடு, சங்கர் நகர், சீரங்கம் பாளையம், சின்ன புதூர், நாராயணசாமி தெரு, அரிசி பாளையம், சாமிநாதபுரம், பால் மார்க்கெட், லாரி மார்க்கெட், செவ்வாய்பேட்டை, பூ மார்க்கெட், ஆகிய பகுதிகளின் பிரச்சாரத்தை மேற்கொண்டார். இந்நிகழ்வில், திமுக மத்திய மாவட்டச் செயலா ளர் ராஜேந்திரன் எம்எல்ஏ, திமுக கள்ளக்குறிச்சி பேரூராட்சிச் செயலா ளர் குபேந்திரன், மாநகரச் செயலா ளர் ரகுபதி, காங்கிரஸ் மாநகர் மாவட் டத் தலைவர் பாஸ்கர், துணை மேயர்  சாரதா தேவி, சிபிஎம் சேலம் தாலு காச் செயலாளர் கே.எஸ்.பழனி சாமி உட்பட பலர் கலந்து கொண்ட னர்.