districts

img

மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை,பிப். 24- தமிழ்நாடு மின்சார வாரியத்தை மூன்றாக பிரிப்பதை கண்டித்து சிஐடியு  தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் வெள்ளியன்று கோவை டாடாபாத் மத்திய அலுவலகம்  நுழைவு வாயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்க்கு மாநிலச் செயலாளர் டி.மணிகண்டன் தலைமை ஏற்றார். தமிழ்நாடு மின் ஊழி யர் மத்திய அமைப்பின் மாநிலத் தலை வர் டி.ஜெய்சங்கர் கோரிக்கை விளக்க உரையாற்றினார். இதில், திரளான மின்  ஊழியர்கள் பங்கேற்றனர்.  இதேபோன்று, நீலகிரி மாவட்டத் தில் உதகை மற்றும் குந்தா ஆகிய பகு திகளிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. இதில் நீலகிரி கிளைச்செயலா ளர்கள் சண்முகம், முரளிதரன் ஆகி யோர் தலைமை வகித்தார். கோவை  மண்டலச் செயலாளர் டி.கோபாலகி ருஷ்ணன், ஓய்வு பெற்றோர் நல அமைப் பின் மண்டலச் செயலாளர் மைக்கேல் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஏராளமான மின் ஊழியர்கள் கலந்து கொண்டனர். கோபி ஈரோடு மாவட்டம், கோபியில் தமிழ் நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மற் றும் ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் சம்பத் தலைமையில் ஆர்ப்பட் டம்  நடைபெற்றது. மின் ஊழியர் மத்திய அமைப்பின் செயலாளர் பண்டியன்,  ஓய்வு பெற்ற நல அமைப்பு செயலாளர் ராம்தாஸ் ஆகியோர் உரையாற்றினர். இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.