districts

img

வாழப்பாடியில் மாவட்ட அளவிலான ஐவர் அணி கால்பந்து போட்டி

சேலம், ஜூன் 6- வாழப்பாடியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான ஐவர்  அணி கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகள் வழங்கப்பட்டன. சேலம் மாவட்டம், வாழப்பாடியில் மாவட்ட அளவிலான ஐவர் அணி கால்பந்து போட்டி, என்ஜிஆர், 149 கபடி குழு  மற்றும் அண்ணாமலை நகைக்கடை சார்பில் நடைபெற்றது. வாழப்பாடி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி திட லில் சனியன்று காலை பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கலைஞர் புகழ் போட்டியை துவக்கி வைத்தார். பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் பழனிச்சாமி, சாய்பாபா அறக் கட்டளை தலைவர் ஜவஹர் ஆகியோர் வீரர்களை வரவேற்ற னர். இப்போட்டியில் சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதி யைச் சேர்ந்த 25 அணிகள் பங்கேற்றன. இதில், சேலம் அவ ரஞ்சி அம்மா அணி முதல் பரிசும், 149 அணி 2 ஆம் பரி சும், வாழப்பாடி கருடன் அணி 3 ஆம் பரிசும், வித்யா மெமோரி யல் அணி 4 ஆம் பரிசும் பெற்றன. இதைத்தொடர்ந்து வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப் பைகள், ரொக்கப்பரிசு மற்றும் சிறந்த வீரர்களுக்கு பதக்கங் களை பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் எம்.கோபி நாத், ஆர்.குணாளன் ஆகியோர் வழங்கினர். இப்போட்டிக் கான ஏற்பாடுகளை ராம், உதயகுமார், நித்தீஸ் ஆகியோர் செய்திருந்தனர்.