சேலம், அக்.26- சேலத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான தடகள போட்டிகளில் 90க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த மாணாக்கர்கள் பங்கேற்றனர். தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் 2022 - 2023 ஆம் ஆண்டிற்கான சேலம் மாவட்ட அளவிலான தடகள போட்டி சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் சேலம் மாவட்டத்திலுள்ள அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் என 90 பள்ளிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். 800 மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட 14 வகையான தடைகளை போட்டிகள் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு தங்களின் தனித்திறமையை வெளிப்படுத்தி வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும், இப்போட்டிகளில் வெற்றி பெறும் மாணாக் கர்கள் நவம்பர் மாதம் மாநில அளவில் திருவண்ணா மலையில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர். இதில் சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன், உடற்கல்வி இயக்குனர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட எண்ணற்றோர் பங்கேற்றனர்.