திருப்பூர், மார்ச் 21- நீலகிரி பாராளுமன்றத் தொகுதி அவிநாசி மற்றும் திருப்பூர் பாராளுமன்ற தொகுதி திருப்பூர் வடக்கு பகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பறை களை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியரான தா.கிறிஸ்துராஜ் வியாழனன்று ஆய்வு மேற்கொண்டார். பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024 குறித்த அறிவிப்பு இந்திய தேர்தல் ஆணை யத்தால் மார்ச் 16 ஆம் தேதியன்று வெளியிடப்பட்டது. பாராளுமன்ற பொதுத்தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளதையொட்டி, நீலகிரி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட அவிநாசி மஹாராஜா கல்லூரி மற்றும் திருப்பூர் வடக்கு தொகுதிக்குட்பட்ட திருப்பூர் மாநகராட்சி, ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் மின்னணு இயந்திரங்கள் இருபறைகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியரான தா.கிறிஸ்துராஜ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, திருப்பூர் சார் ஆட்சியர் சௌம்யா ஆனந்த், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் செல்வி, திருப்பூர் வடக்கு வட்டாட்சியர் மகேஷ் மற்றும் தொடர்புடைய தேர்தல் அலுவலர்கள் உடனிருந்தனர்.