districts

img

ஆசிரியர் பயிற்றுநர் நியமனத்தேர்வு: மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

நாமக்கல், பிப்.4- தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும், பட்ட தாரி ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர் நியமனத் தேர்வு  மையத்தில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ச.உமா ஆய்வு செய்தார். நாமக்கல் மாவட்டத்தில் 4 தேர்வு மையங்களில் தமிழ் நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும், பட்டதாரி ஆசிரி யர் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர் நியமனத்தேர்வு நடைபெற் றது. நாமக்கல் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் (தெற்கு)  368 நபர்கள், நாமக்கல் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 396 நபர்கள், நாமக்கல் அரசினர் மேல்நிலைப்பள்ளி யில் (வடக்கு) 273 நபர்கள், நாமக்கல் ஜெய்விகாஸ் மேல்நி லைப் பள்ளியில் 262 நபர்கள் என 1299 நபர்கள் இத்தேர்வை எழுத விண்ணப்பத்திருந்தனர். இவர்களில் 1249 நபர்கள் தேர்வு எழுதினர். 50 நபர்கள் தேர்வு எழுதவில்லை. மேலும், நாமக்கல் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் (வடக்கு) தேர்வு  மையத்தில் பார்வை குறைபாடு உள்ள 5 நபர்களுக்கு சொல் வதை எழுதுபவர் நியமனம் செய்யப்பட்டிருந்தனர். இந் நிலையில் இந்த தேர்வு மையத்தில் மாவட்ட ஆட்சியர் ச.உமா நேரில் ஆய்வு மேற்கொண்டார்.